tamilnadu

img

மண்ணில் இடக்கூடிய நானோ உரத்திற்கு காப்புரிமம்

சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற அதிக பயன்தரக் கூடிய வேளாண் இடுபொ ருட்களை உருவாக்குவதற் காக 2010-ஆம் ஆண்டில் வேளாண் நானோ தொழில்நுட்ப  மையத்தினை நாட்டிலேயே முதன்முதலாக ஆரம்பித்த  பெருமை தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தையே சாரும்.  மேலும் இம்மையம் இந்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை வகுத்த ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளின்படி நானோ உரங்களை வர்த்தகமாக்குதல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்தல் ஆகியவற்றுக்கான தளமாகச் செயல்படுகிறது. பல்க லைக்கழகத்தின் கலைநுணுக்க வசதியுடன் கூடிய இம்மையத்திலிருந்து இத்தகைய புதுமையான உரத்தினை வெளி யிடுவதில் மிகவும் மகிழ்வதாக பல்கலை. துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். நம் நாட்டில் இதுவரை 12 நானோ  உரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தா லும் அவை அனைத்தும் திரவ நிலையில்  உள்ளவை. அத்துடன் அவற்றை இலைவழி யாகத் தெளிப்பதில் விவசாயிகள் மிகவும்  சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆனால்  இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நானோ உரமானது எளிதாகப் பயிர்களால் உறிஞ்சக்கூடிய, விரைவாகக் கிரகிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த  மற்றும் உற்பத்தியைப் பெருக்கக்கூடிய தன்மை கொண்டவை. இலைவழியாகத் தெளிக்கக்கூடிய நானோ உரங்களுக்கு மாற்றாக மண்ணில்  இடக்கூடிய நானோ உரமாகக் கண்டறிய  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மானது முன்னோடி முயற்சியினை மேற் கொண்டது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு தனித்துவமானதாகவும் புதுமையாகவும் விளங்கியதால் எளிதாகக் காப்புரிமம் பெற்றுள்ளது.  இந்த நானோ உர உருவாக்கத்தில், உயிரித்தொகுதியிலிருந்து பெறப்பட்ட லிக்னின் ஆனது, சிட்ரிக் அமிலம் மற்றும்  எதிர் அயனி இயற்கை பாலிமர்  கைட்டோசானுடன் இணைந்த யூரியா  மூலக்கூறுகளைப் பிடிக்கக்கூடிய  தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊடுருவல் உலை ஆய்வின்படி வழக்க மான யூரியாவிலிருந்து தழைச் சத்து வெளியீடு நான்கு நாட்களில்  முடிவடைகிறது. ஆனால் இந்த புதிய வகை நானோ யூரியாவில் 33 சதவீத  தழைச்சத்தானது 30 முதல் 35  நாட்களுக்கு லேசான கடினத்தன்மையுள்ள மண்ணில் வெளியிடப்படுகிறது. நீடித்த நிலையான இந்த முறையில் சத்துக்களை வெளியிடுவது தழைச்சத்துப் பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதுடன் சுற்றுச்சூழலில் சத்துக்கள் வீணாவதும் குறைகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த நானோ யூரி யாவை உருவாக்கிக் காப்புரிமம் பெற்ற  வேளாண் விஞ்ஞானிகளான மேனாள் ஆராய்ச்சி இயக்குநரும், நானோ தொழில் நுட்ப மையத்தின் முதல் தலைவரும், ஹைதராபத்தில் இயங்கும் கோரமண்டல் பன்னாட்டு நிறுவனத்தின் அறிவியல் ஆலோசகருமான முனைவர் கே.எஸ்.சுப்ர மணியன், அவரது மாணவி முனைவர் எம். லதா மற்றும் இந்த நானோ யூரியாவின் மூலக்கூறு வடிவமைப்பை உருவாக்கிய முனைவர் ஜெயசுந்தர சர்மிளா ஆகியோரை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வெகு வாகப் பாராட்டியுள்ளார்.  உயிரித் தொழில்நுட்பத் துறையின் விதி முறைகளில் உருவாக்கப்பட்ட இந்த நானோ  உரத்தை வர்த்தகரீதியாகக் கொண்டு செல்லு முன் பரந்த அளவில் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.