tamilnadu

img

இஸ்ரேல் அரசின் இன அழிப்பு போரைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் அரசின் இன அழிப்பு போரைக் கண்டித்து  தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜுன் 28-  இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனடியாக நிறுத்த வேண்டும். காசா மக்களுக்கான சகோதர உதவி, உணவு, மருந்து மற்றும் மருத்துவ உதவிகளை தடுக்கக் கூடாது. அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு துணை போகக் கூடாது. இந்திய ஒன்றிய அரசு பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவர் ஹெச். அப்துல் நசீர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பி. செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என். குருசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், மனித நேய ஜனநாயக கட்சி அவைத் தலைவர் எம். அப்துல்லா, மக்கா பள்ளி தலைவர் ஏ.ஜாகீர் உசேன், மவுல்வி ஜெ.காதர் மைதீன், இடதுசாரிகள் பொதுமேடை துரை.மதிவாணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ப.சத்தியநாதன், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஆர். புண்ணியமூர்த்தி, சிபிஎம் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரச் செயலாளர் எம்.கோஸ்கனி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு ஜஸ்டின் மற்றும் பலர் ஈடுபட்டனர்.