tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது!

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. மின்  தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில், நீட் தேர்வு எழுதுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாததால் மறுதேர்வு நடத்த முடியாது என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை

மதுரை: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை யில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்காலத் தடை  விதிக்கப்பட்டுள்ளது. எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளது.  

பேராசிரியர் கைது

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் படித்து வந்த 27 வயது மாணவி ஒருவர், 2018 ஆம் ஆண்டில் முதுநிலை வேளாண் படித்து  வந்தார். அப்போது அதே துறையில் உதவிப் பேராசிரிய ராக பணியாற்றி வந்த 55 வயதுடைய ராஜா, அந்த மாண வியுடன் நெருங்கிப் பழகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த  மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக் கிறார். அப்போது அதைத் தன்னுடைய செல்போனில் வீடியோ  எடுத்து வைத்திருந்த உதவிப் பேராசிரியர் ராஜா, அதைக்  காட்டி மாணவியை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக் கிறார். இதனால், பயந்துபோன மாணவி வேறு வழியின்றி பேராசிரியர் ராஜா அழைக்கும் இடத்திற்கெல்லாம் சென்றி ருக்கிறார். பிறகு, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக் குமாரிடம் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து நடந்த விசா ரணையில் மாணவி அளித்த புகார் உண்மை என்று தெரிய வரவே, உதவிப் பேராசிரியர் ராஜாவை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர்.

தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு

சென்னை: தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் எனக் கூறியது குறித்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், வழக்கின்  விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நிலை யில், “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடா மல் ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரி வித்துள்ளது.

ரூ.10 லட்சம் நிவாரணம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை  காப்பாற்றி, நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சன் குடும்பத் திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் சி.விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு  அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக  மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக் கோட்டை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில்  திங்களன்று விசாரணைக்கு வந்தது. ஆனால், விஜய பாஸ்கர் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் வழக்குரை ஞர்கள் ஆஜராயினர். இதனால், வழக்கு விசாரணை ஜுன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.'

வ.உ.சி. துறைமுக ஆணையம் பெருமிதம்!

சென்னை: தென் இந்தியாவின் வர்த்தக இயந்திரமாகத் திகழ்ந்து  வருகிறது வ.உ.சிதம்பர னார் துறைமுக ஆணை யம். இந்த நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்கு களையும், 1 மில்லியன்  டிஇயு சரக்கு பெட்டகங்க ளையும் கையாளும் இலக் குடன், சரக்கு கையாளுத லில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்ப டுத்தி வருகிறது. இந்நிலை யில், வளர்ச்சித் திட்டப் பணி களை செயல்படுத்துவதில் தேசிய அளவில் தூத்துக் குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படு வதாக ஆணையத் தலை வர் சுசாந்த குமார் புரோ ஹித் பெருமிதம் தெரிவித் துள்ளார்.

3 மோசடி வழக்குகள் பதிவு

சென்னை: அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி  பிரசாத் மீது நுங்கம்பாக் கம் போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்த னர். சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலு, அசோக் உள்ளிட்டோரிடம் அரசு வேலை வாங்கித் தருவ தாக கூறி ரூ.11 லட்சம், ரூ.5.20 லட்சம் பெற்று  மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நுங்கம்பாக் கம் பாரில் நடந்த மோதல்  தொடர்பாக மே 29 அன்று  பிரசாத் கைது செய்யப் பட்டு புழல் சிறையில் உள்ளார்.

இலங்கை தமிழர் 3 பேர் கைது

இராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடி யால் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 300-க்கும் மேற்பட்டோர் மண்ட பம் முகாமில் வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலை யில், மண்டபம் இலங்கை  தமிழர் மறுவாழ்வு முகா மில் இருந்த, இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த  ரவீந்திரன் (25), இவரது மனைவி அம்பிகா (25),  மூன்று வயது மகன் ஆகி யோர் பாம்பனில் இருந்து படகு மூலம் தப்பிச் சென்ற னர். இவர்களை தலை மன்னார் அருகே பட கோட்டியுடன் இலங்கை கடற்படையினர் திங்க ளன்று கைது செய்தனர்.