tamilnadu

img

குஜராத்தில் பலத்த மழை தனித்தீவானது சூரத் நகரம்

குஜராத்தில் பலத்த மழை தனித்தீவானது சூரத் நகரம்

குஜராத் மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள் ளது. மாநிலத்தின் பெரும்பா லான இடங்கள் வெள்ளத்தில் தத்த ளித்து வரும் நிலையில், சூரத் நகரம் வெள்ள நீரால் தனித்தீவாகியுள்ளது.  சூரத் நகரில் கடந்த 2 நாட்களாக 20 செ.மீ., அளவில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்க ளில் 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கி யது. முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால்  சூரத் நகரம் மற்ற நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள் ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர் பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். கனமழை தொடரும் தற்போதைய சூழ்நிலையில் சூரத் உள்ளிட்ட குஜராத் மாநிலத்தின் பெரும் பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்த ளித்து வரும் நிலையில், தெற்கு மற்றும்  மத்திய குஜராத் பகுதிகள் ஆரஞ்சு எச்ச ரிக்கையுடன் தொடர்ந்து கனமழையை எதிர்கொள்ளும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித் துள்ளது.