tamilnadu

img

இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தான் பொறுப்பாம்!

இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தான் பொறுப்பாம்!

பாஜக எம்.பி., 
நிஷிகாந்த் துபே சர்ச்சை பேச்சு

இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட  உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதி பதி சஞ்சீவ் கன்னாதான் பொறுப்பு என்று பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்  சையையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் விவகா ரத்தில் ஜனாதிபதிக்கு எச்ச ரிக்கை மற்றும் வக்பு திருத்த  சட்டம் என இரண்டு விவகாரங்க ளில் உச்சநீதிமன்றம் மோடி அர சுக்கு எதிராக அடுத்தடுத்து சாட்டையை சுழற்றியுள்ளதால் ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரி வார் கும்பல் மிரண்டு போயுள்ளது.  இதனால் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நாட்டின் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உச்ச நீதிமன்ற உத்தரவை பொறுத்  துக்கொள்ள முடியாமல், “நாட்  டில் இருப்பது உச்சநீதிமன்றம் தானா? அல்லது சூப்பர் பவர் கொண்ட நாடாளுமன்றமா?” என  தனது பொறுப்புமிக்க பதவியை  மறந்து சர்ச்சைக்குரிய கருத்துக்  களை வெளியிட்டார். தொடர்ந்து பாஜக எம்.பி., யும், வெறுப்பு பேச்சுபேர்வழியு மான நிஷிகாந்த் துபே ஏஎன்ஐ  செய்தி நிறுவனத்திடம் அளித்த  பேட்டியில், ”உச்சநீதிமன்றத் தின் தலைமை நீதிபதியை நிய மிப்பதே ஜனாதிபதிதான். அப்ப டியான அதிகாரம் படைத்த ஜனா திபதிக்கு எப்படி உச்சநீதிமன் றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடி யும்? நாடாளுமன்றம் என்பது நாட்  டின் சட்டங்களை நிறைவேற்று கிற மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளின் அமைப்பு. ஆனால் நாடாளுமன்றத்துக்கே நீங்கள் (உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி) கட்டளையிடு வீர்களா? புதிய சட்டங்கள் எப்படி  கொண்டு வர முடியும்? நாட்டின்  ஜனாதிபதி, மசோதாக்கள் மீது  3 மாதத்தில் முடிவெடுக்க வேண்  டும் என்று எந்த சட்டம்தான் சொல்கிறது? இத்தகைய தீர்ப்பு கள், நாட்டை அசாதாரண நிலைக்கு கொண்டு போகிறது. அடுத்த முறை நாடாளுமன்றம் கூடும் போது இது பற்றி விவா திக்கப்பட வேண்டும். நாட்டில்  நடைபெறுகிற அனைத்துவித மான மோதல்களுக்குமே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதி பதி சஞ்சீவ் கன்னாதான் பொறுப்பு. மேலும் இந்தியாவில்  உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நிஷி காந்த் துபேவின் கருத்திற்கு நாடு  முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. பாஜக மழுப்பல் பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபேயின் பேச்சு, அவரது தனிப்  பட்ட கருத்து ஆகும். அவரது  கருத்துகளை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது என பாஜக  தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி. நட்டா நிராகரித்துள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான ஜகதீப்  தன்கரின் பேச்சு தொடர்பாக பாஜக எவ்வித கருத்தும் தெரி விக்கவில்லை. இதனால் ஜகதீப் தன்கரின் பேச்சை பாஜக ஆத ரிக்கிறதா என்ற கேள்வி பலமாக கிளம்பியுள்ளது.