tamilnadu

img

48 ஆயிரம் மாணவர்களுக்கும் துணைத்தேர்வு : அமைச்சர் தகவல்

சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மொழிப்பாடத்தில் தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களையும் துணைத் தேர்வு எழுத நடவடி க்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் வெள்ளிக்கிழமை (மார்க் 24) கேள்வி நேரத் திற்கு பிறகு, 12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வின் முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை சுமார் 50,000 மாண வர்கள் எழுதாதது குறித்து செங்கோட்டையன் (அதி முக), பிரின்ஸ் (காங்கிரஸ்),  நாகைமாலி (சிபிஎம்), ஜி.கே.மணி(பாமக), அப்துல்சமது (மமக), தி.வேல்முருகன்(தவாஉக) உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.  அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகைமாலி, “சமீபத்தில் துவங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இதுவரை தமிழ் நாட்டு வரலாற்றில் இல் லாத அளவுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கூறப் படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பிறகு பதில் அளித்த பள்ளிக் கல்வி துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி கூறியதாவது:- தேர்வு எழுதாத 50 ஆயிரம் மாணவர்கள் எங்கே  போனார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள் ளது. கொரோனா காலம் அனைத்து துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. கொரோனாவிற்கு பிறகு பல சவால்களை எதிர் கொண்டுள்ளோம். ஒரு குழந்தை கூட பள்ளியை விட்டு வெளியே சென்று விட க்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை பணியாற்றி வருகிறது.  கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல் பாஸ்’ முழு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தான் தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி வரு கின்றனர். கொரோனா தொற்றால் இடையில் நின்ற 1.90 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த் தோம். இதில் 78 ஆயிரம் பேர் தற்போது தேர்வு எழுதி வரு கின்றனர்.  47, 943 பேர் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதவில்லை. இவர்கள் அனைவரையும்  துணைத்தேர்வை எழுத வைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொண்டு வருகிறோம்.

வரும் கல்வி ஆண்டு முதல் பொதுத் தேர்வுக் கான பட்டியல் தயார் செய் யும்போது குறைந்தபட்சம் 75 விழுக்காடு வருகைப் பதிவு கணக்கில் கொள்ளப்படும். துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தொடர்ந்து நடத் தப்படும். பள்ளி வாரியாக குழு அமைத்து ‘ஆப்சென்ட்’ ஆகும் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக் கப்படும். இதுகுறித்து மாண வர்களுக்கும், பெற்றோர் களுக்கும் ஆலோசனை வழங்கப்படும். துணைத் தேர்வுக்கு தயார் செய்ய சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். துணைத்தேர்வு மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 14417 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணில் மாணவர் களுக்கு விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது.  வரும் கல்வி ஆண்டில் ஒரு வாரத்தில் 3 நாட்கள், 2 வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வராத மாணவர்களின் பட்டி யல் தயார் செய்து நட டிக்கை எடுக்கப்படும். 4  வாரத்திற்கு மேல் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால், அந்த மாணவர் களைக் கண்டறிந்து ஆலோ சனை வழங்கப்படும். இதற்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.