tamilnadu

உழைக்கும் வர்க்கத்திற்காக அர்ப்பணித்த சுனில் மொய்த்ரா

உழைக்கும் வர்க்கத்திற்காக அர்ப்பணித்த  சுனில் மொய்த்ரா

சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தோழர் சுனில் மொய்த்ரா அவர்கள் 01.02.1927இல் சிட்டகாங்கில் பிறந்தார். சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற அவர் காப்பீடு ஊழியர்களின் உன்னதமான தலைவராக பரிணமித்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கத்தை உரு வாக்கியவர்களில் அவருக்கு முதன்மை பங்கு உண்டு. தனது இறுதிக் காலம்வரை காப்பீடு ஊழியர்களின் தொ ழிற்சங்கத்தில் அக்கறையும் கவனமும் செலுத்தினார்.  1951ஆம் ஆண்டு காப்பீடு நிறுவனத்தில் இணைந்த அவர் தொழிற்சங்கப் பணி காரணமாக நிர்வாகத்தால் கோவை உட்பட பல நகரங்களுக்கு மாற்றப்பட்டார். இறுதியில் 1958இல் கொல்கத்தாவில் பணியமர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் 1952ஆம் ஆண்டு இணைந்தார். காப்பீடுத் துறையில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த தொழிற்சங்க பணியிலும் சிறந்து விளங்கினார்.  மார்க்சியம்-லெனினியம் கற்பதில் ஆழமான ஈடுபாடை வெளிப்படுத்திய அவர் அந்த சித்தாந்தத்தை பொருத்தமான முறையில் அமலாக்குவதிலும் திறமையை வெளிப்படுத்தினார். மார்க்சிய சித்தாந்தத்தை காப்பதில் தனிக் கவனம் செலுத்தினார். 1967ஆம் ஆண்டு கல்கத்தா மாவட்டக்குழுவுக்கு தேர்வான அவர் அதன் மாவட்ட செயற்குழுவிலும் நீண்ட காலம் பணியாற்றி னார். 1985ஆம் ஆண்டு மத்தியக் குழுவுக்கும் பின்னர் 1988ஆம் ஆண்டு மத்திய செயற்குழுவுக்கும் தேர்வானார். 1992ஆம் ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வானார்.  பத்திரிகை ஆசிரியராக கட்சியின் ஆங்கில இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராகப் பணி யாற்றினார். கட்சியின் சித்தாந்த பத்திரிகையான ஆங்கில மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். ஏராளமான கட்டுரைகள் மட்டுமின்றி பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். 1980ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் செயலாற்றினார். பொதுகணக்கு குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவரின் பணி அனைவராலும் பாராட்டப்பட்டது. 1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் நாள் தனது 69ஆவது வயதில் எதிர்பாராதவிதமாக கடு மையான மாரடைப்பால் கல்கத்தாவில் காலமானார். அவரது மனைவி நீலிமா  மொய்தாரா அவர்கள் உழைக்கும் பெண்களை குறிப்பாக அங்கன்வாடி ஊழி யர்களை திரட்டுவதில் பெரும் பங்கு ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாட்டாளிகளின்  தலைவர்  சித்தபிரதா மஜூம்தார்

அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட தோழர் சித்தபிரதா மஜூம்தார் அவர்கள் 1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி டாக்காவில் பிறந்தார். 1957ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவர் பஞ்சாலை உற் பத்தியில் இஞ்சினியரிங் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பி டத்தக்கது. கணிசமான ஊதியத்துடன் வேலை வாய்ப்புகள் அவரை அணுகிய பொழுதும் அவற்றை உதறிவிட்டு இடது சாரி அரசியல் வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  முதலில் மாணவர் இயக்கத்திலும் பின்னர் தொழிற் சங்க இயக்கத்திலும் செயல்பட்டார். ஹவுரா மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் பணியாற்றிய தொழிலாளர்களின் போராட்டங்களை வழி நடத்தினார். அந்த மாவட்டத்தில் வலுவான தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கினார். மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது அதில் தன்னை இணைத்துக் கொண்ட மஜூம்தார் அவர்கள் ஹவுரா மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தியதில் சிறந்த பங்கை ஆற்றினார்.  கட்சி கல்வியில் பெரும் கவனம் செலுத்திய அவர் ஏராளமான நூல்க ளை எழுதியுள்ளார். அதே சமயத்தில் மேற்கு வங்கத்தில் தொழிற்சங்க இயக் கத்தை கட்டுவதில் கடுமையாக உழைத்தார். 1965-66இல் இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 16 மாதங்கள் சிறையில் இருந்தார். கட்சியின் ஹவுரா மாவட்டக் குழுவில் நீண்ட காலம் பணியாற்றிய அவர் 1982ஆம் ஆண்டு மாநிலக் குழு வுக்கும் 1985ஆம் ஆண்டு மாநில செயற்குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார்.  1995ஆம் ஆண்டு 15ஆவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவுக்கும் 2004ஆம் ஆண்டு 18ஆவது மாநாட்டில் அரசியல் தலைமைக் குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். ஒரு முறை சட்டமன்றத்துக்கும் ஒரு முறை மாநிலங்களவைக்கும் தேர்வு செய்யப்பட்ட அவர் 5 ஆண்டுகள் இடது முன்னணி ஆட்சியில் அமைச்சராகவும் பணியாற்றினார்.  சிஐடியு பொதுச் செயலாளர் 1990ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில சிஐடியு பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர் பெங்களூர் மாநாட்டில் அகில இந்திய பொது செயலா ளராக தேர்வானார். நவீன நாசகர பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக  மிகத் தீவிரமாக தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்த அவர் இந்த கொள்கைகளின் விளைவுகளுக்கு எதிராக மட்டுமின்றி நாசகர கொள்கை களை மாற்றுவதற்காகவும்  போராட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். அதற்காக தொழிற்சங்க ஒற்றுமையை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். 2007ஆம் ஆண்டு தனது 71ஆவது வயதில் பிப்ரவரி 20ஆம் நாள் காலமானார்.