சென்னை, பிப். 18- பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் வேளாண் துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத் தினார். அப்போது, சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகளுக்கு தெரியாமலே அவர்கள் பெயரில் பெற்ற 200 கோடி ரூபாய் கடன் வாங்கி யது குறித்து வங்கி (போர்டு) நிர்வா கத்துடன் பேசி அதில் இருந்து விவசா யிகளை விடுவிக்கவும், அவர்களுக்கும் கடனுக்கும் தொடர்பில்லை என்று சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேபோல் ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 75 கோடி ரூபாயில் 45 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள் ளது. மீதமுள்ள தொகை வழங்குவது குறித்து தேசிய கடன் தீர்ப்பாயத்தில் அரசு மேல்முறையீடு செய்யும் என்றார். மதுரை நேசனல், மயிலாடுதுறை என்.பி.கே.ஆர். ஆம்பூர் ஆலைகளை வரும் ஆண்டில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திருத்தணி, கள்ளக்குறிச்சி 1 மூங்கில் துறைப்பட்டு கூட்டுறவு ஆலைகளை புனரமைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முத்தரப்பு கூட்டம் நடத்தி யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் வெட்டுக் கூலி நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், பொருளாளர் சி.பெரு மாள், மாநிலச் செயலாளர் தங்க காசி நாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் மற்றும் தமிழ்நாடு சர்க்கரை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.