tamilnadu

img

திருமண்டக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி காலமானார்

கும்பகோணம், மார்ச் 10- திருஆரூரான் சர்க்கரை ஆலை யில் கரும்பு விவசாயிகளின் பெயரில் மோசடியாக வங்கியில் கடன் பெற்றும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை யை கொடுக்காமலும் மோசடியாக தனியாருக்கு ஆலையை விற்றதை கண்டித்தும் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திருமண்டக்குடி அருகே உள்ள கூனஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 84 நாட்களாக தொடர்ந்து கடும் பனியிலும் மழையிலும் வெயி லிலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், அவர் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். 

தலைவர்கள் ஆறுதல்

விவசாயி கிருஷ்ணமூர்த்தி இறப்பு குறித்து தகவல் அறிந்து கரும்பு  விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலத் தலைவர் வேல்மாறன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்குமார், என்.வி.கண்ணன், நாக.முருகேசன், சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் அவரது இல்லத்திற்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.  பின்னர் சங்கத்தின் பொதுச்செய லாளர் டி.ரவீந்திரன் செய்தியாளர்களி டம் கூறுகையில், ‘‘கடந்த 84 நாட் களாக தொடர் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்ட விவசாயி கிருஷ்ண மூர்த்தி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை யும் அவரது குடும்பத்திற்கு ஆறு தலையும் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க மாநிலக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.  அவர் எதற்காக போராடினாரோ அந்தக் கோரிக்கையை நிறை வேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக அவருக்கு சேர வேண்டிய முழு தொகையையும் வட்டி யுடன் உடனே வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய அவரது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’ என தெரிவித்தார்.