tamilnadu

img

ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் வகுப்பு தொடர்ந்து நடக்கும் அத்துமீறலை உடனே நிறுத்துங்கள்!

மதுரை,அக்.24- ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்து  ரயில்வே மருத்துவமனை ஊழியர் களுக்கு இந்தியில் மட்டும் இணைய வகுப்பு நடத்தப்படு வதைக் கண்டித்து  ரயில்வே அமைச்ச ருக்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., கடிதம் எழுதியுள்ளார்.  அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ரயில்வே மருத்துவமனைகளில் புதிய நிர்வாக தகவல் அமைப்பு முறை அமல்படுத்துவதற்காக அதன்மீது மருத்துவ ஊழியர் களுக்கு பயிற்சி அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  அந்த பயிற்சி அக்டோபர் 21 முதல் 29 வரை இணையவழி நடை பெறுகிறது. இதில் பயிற்று மொழி  இந்தி மட்டுமே பயன்படுத்தப்படு கிறது. இதனால் இந்தி பேசாத மாநி லங்களில் உள்ள ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறார்கள். பயிற்சியும் பயனற்றுப் போகிறது. குறிப்பாக தமிழகத்தில் பணியாற் றும் மருத்துவ ரயில்வே ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இந்த பயிற்சியை இந்தி யில் மட்டும் நடத்துவதை நான் கண்டிக்கிறேன். அதனை தமிழிலும்  அதைப்போன்று இந்தி இல்லாத மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று கோருகிறேன்.  அதற்கு உட னடியாக வாய்ப்பு இல்லை என்றால் குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் தனியாக இணையவழி வகுப்பு ஏற் பாடு செய்திட கோருகிறேன். அது வரை இந்தி பேசாத மாநில ஊழியர் கள் இந்த வகுப்பில் கலந்துகொள்ள விதிவிலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;