tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

9 ஆயிரம் எண்கள் ஆய்வு

சேலம்: ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான நீல கிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த  கொலை, கொள்ளை தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த  சயான், மனோஜ் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்ட னர். இந்த கொலை, கொள்ளையில் வேறு யாருக் கெல்லாம் தொடர்பு உள்ளது என கண்டுபிடிக்க, சிபிசிஐடி போலீசார் பெருமுயற்சி எடுத்து 9 ஆயிரம் செல்போன்  எண்களை பெற்று, அதிலிருந்து ஆய்வு செய்து வரு கின்றனர். குஜராத்தில் உள்ள ஆய்வக பல்கலைக்கழ கம் மூலம் செல்போன் பதிவு ஆதாரங்களை மீட்கும் பணி கள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும்  இரண்டு மாதத்தில் அந்த ஆதாரங்கள் அனைத்தும் கிடைக்கும் என தெரிகிறது.

தேர்தல் பரப்புரை தொடக்கம்  

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் காணொலி மூலம் பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2026 ஆம் ஆண்டுக்கான  சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கும் விதமாக, மக்களை சந்திக்க இப்போதே புறப்பட வேண்டும் என்றும், ஓரணியில் மக்களை இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

போட்டியின்றி தேர்வு உறுதி

சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்கள வைக்கு 6 புதிய எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன்  19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. திமுக, அதிமுகவின் அதிகாரப் பூர்வ வேட்பாளர்கள் 6 பேர் மற்றும் 3 சுயேச்சைகள் என  இதுவரை 9 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். திமுக, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6  பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி யாகியுள்ளது.

இன்னும் நேரம் வரவில்லை!

 விழுப்புரம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தி லிருந்து சென்னைக்கு புறப்பட்ட பாமக நிறுவனர் மருத்து வர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு முடிவு செய்ய நேரம் இன்னும் வரவில்லை என்றும், அன்புமணி  உடனான பிரச்சனை குறித்த கேள்விக்கு தீர்வு என்று  ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.  

பாஜகவின் ஊதுகுழல் இபிஎஸ்

 சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜகவுடன் கூட்டணி சேரும் முன்பு ஒரு மாதிரியாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு வேறு மாதிரி  பேசுகிறார். பாஜக சொல்ல வேண்டிய அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கும் ஈபிஎஸ், பாஜகவின் ஊது குழ லாக செயல்படுகிறார் என்று ஆர்.எஸ்.பாரதி கடுமை யாக விமர்சித்துள்ளார்.

சந்திப்பு ஏன்?

 விழுப்புரம்: ஆடிட்டர் குருமூர்த்திக்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. அவர் மீது மரியாதை வைத்து உள்ளேன். சைதை துரைசாமி எனது நீண்ட நாள் நண்பர்.  இதனால் இருவரும் என்னை சந்தித்தனர். அவர்களிடம் என்ன பேசினேன் என்பதை பிறகு கூறுகிறேன் என்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரி வித்தார்.

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஜூன் 10 முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 7,8,9 வரை தமிழகத் தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 10, 11, 12  இல் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வாட்டர்  ஏடிஎம்-கள் பழுதடைந்தும், சுகாதாரமின்றியும் காட்சியளிக் கின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் வாட்டர் ஏடிஎம்-களில்  வரக் கூடிய குளிர்ந்த நீரை பிடித்து அருந்த பெரும்பாலா னோர் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே வாட்டர் ஏடிஎம்., களை சரி செய்வதுடன், அவற்றில் சுடுநீர் வருவதற்கான  கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் எழுந்துள்ளது.

பொறியியல் படிப்புக்கு  3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

சென்னை: தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்பில்  அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற் கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், தினமும் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது. அதன்படி, பொறியியல் படிப்புக்கான கலந் தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்து உள்ளது. எனினும் கட்டணம் செலுத்த வும் சான்றிதழ்களைப் பதிவேற்றம்  செய்யவும் ஜூன் 9  அன்று வரை கால  அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாணவர் களுக்கு ஜூன் 11 அன்று ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 20 ஆம் தேதி வரை அவர்களின் சான்றிதழ்கள் இணையவழியில் சரிபார்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியாகும். 

ரூ.305 கோடி சொத்து; ரூ.49 கோடி கடன் கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை, ஜூன் 7- ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மக்கள்  நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., பதவிக்கு  போட்டியிடுகிறார். இதற்காக, தன்னுடைய வேட்பு மனு வைத் தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விவ ரங்கள் வருமாறு: 2023 - 24 நிதியாண்டில், ரூ.78.90 கோடி வருமானம், அசை யும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி என அவரது மொத்த  சொத்தின் மதிப்பு ரூ.305.55 கோடி. ரூ.49.67 கோடி கடன் உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் இரண்டு, உத்தண்டி மற்றும் சோழிங்கநல்லூரில் தலா ஒன்று என்று நான்கு வணிகக் கட்டடங்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்  மொத்த மதிப்பு ரூ.111.1 கோடி. திண்டுக்கல் வில்பட்டியில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு ரூ.22.24 கோடி. கையில் ரொக்கமாக ரூ.2.60 லட்சம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், BMW, லக்சஸ் - இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி.

ட்சியில் இருந்து நீக்கம் தஞ்சாவூர்,

ஜுன் 7-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றியச் செயலா ளர், மாவட்டக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் உள்ள வி. முரளிதரன், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் பி.எம். காதர் உசேன் ஆகிய இருவரும் கட்சி விரோத நடவ டிக்கைகள் காரணமாக, கட்சியின் அடிப்படை உறுப்பி னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நூதன மோசடி: பாஜக பிரமுகர் உள்பட 2 பேர் கைது

சென்னை, ஜூன் 7- போலி பணி நியமன ஆணை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட பாஜக எஸ்.சி,  எஸ்.டி. பிரிவு முன்னாள் மாவட்டச் செயலா ளர் ஜெயச்சந்திரன், உடந்தையாக இருந்த  ஜோஷிதா ஆகியோர் கைது செய்யப்பட்ட னர். குப்பை தொட்டிகளை போட்டோ எடுப்பதுதான் வேலை எனக்கூறி வெங்க டேஷக்கு 2023 இல் போலி நியமன ஆணை  வழங்கியுள்ளனர். மாநகராட்சியில் உதவி ஆணையர் பதவி உயர்வு வாங்கி தருவதாக  நம்பவைத்து வெங்கடேஷிடம் ரூ.14 லட்சம்  பறித்துள்ளனர். உதவி ஆணையர் அலுவலகம் ஒதுக்காத தால் சந்தேகம் அடைந்த வெங்கடேஷ், மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து விசா ரித்தபோது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வெங்கடேஷ் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணிக்கு போலி நிய மன ஆணை வழங்கி மோசடி செய்தது விசா ரணையில் அம்பலமானது. மேலும், தலை மறைவாக உள்ள லதா மற்றும் கௌரி ஆகி யோரை காவல்துறையினர் தேடி வருகின்ற  னர்.

ஆதாரை பரிசோதிக்க உத்தரவு

சென்னை: ரயிலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார்  கட்டாயமாக்கப்பட வுள்ள  நிலையில், ரயில் பயணத் தின் போது, பயணிகள் அடையாள அட்டைக்கு ஆதாரை காண்பித்தால் அதை ஸ்கேன் செய்து பரி சோதிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்,  ரயில் இயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல ஜூன் 10 ஆம் தேதி இரவு உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப் பாக, சென்னை கோயம் பேடு பேருந்து நிலை யத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம்  பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந் துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை யில் இருந்து பவுர்ணமி சிறப்பு ரயில்களும் இயக்கப் பட உள்ளன.

ட்ரோன்கள் பறக்க தடை

மதுரை:  மதுரை ஒத்தக் கடை பகுதியில் ஞாயி றன்று நடைபெறும் பாஜக  தென் மாவட்ட நிர்வாகிகள்  கூட்டத்தில் பங்கேற்பதற் காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மது ரைக்கு வருகை தர உள்ள தையொட்டி மதுரையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ட்ரோன்கள்  பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி  ட்ரோன்கள் பறக்க விடு வோர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தல்

நாகை: மீனவர்கள் மீதான இலங்கை தாக்கு தலை தடுக்க ஒன்றிய அரசு  கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு அறிவித்த மீன்பிடி தடை காலம் ஜூன் 14 அன்று டன் நிறைவு பெறுகிறது. தடைக்காலம் முடிந்து ஆழ்கடல் செல்லும் மீனவர் களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்துவது இலங்கை அரசும், இலங்கை கடற் கொள்ளையர்களும். இனி வரும் காலங்களில் மீன வர்களுக்கு இலங்கை அரசு இன்னல்கள் தராமல்  இருக்க ஒரே வழி கச்சத் தீவை மீட்பதுதான் என தெரிவித்துள்ளனர்.