சிதம்பரம், மார்ச் 13- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மார்ச் 14,1 5 மற்றும் 16-ஆகிய தேதிகளில் தேசிய மதிப்பீடு மற்றும்தரச்சான்றுக் குழு ஆய்வு செய்ய உள்ளதாக துணைவேந்தர் ராம. கதிரேசன் தெரிவித்துள்ளார். தரச்சான்றானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும். இதற்க்காக இந்தியா முழுவதிலும் இருந்து 7 பேர் கொண்ட வல்லுநர்கள் குழு ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கு முன் 2000ம் ஆண்டு நான்கு நட்சத்திர குறியீடும் 2007ம் ஆண்டு பி++ ம், 2014ம் ஆண்டு ஏ கிரேடும் பெற்றது, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றுக் குழு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிவது இது 4வது முறை ஆகும். இந்த முறை ஏ++ கிரேடு கிடைக்க ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாண வர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வு டன் பணிகளை செய்து கொண்டிரு க்கிறார்கள். இந்த தரமதிப்பீட்டால் மாண வர்களின் கல்வி தரம் மேம்படுவதோடு மட்டு மல்லாமல், மத்திய, மாநில அரசுகளிடம் அதிக நிதியுதவி கிடைக்கும் எனறும் அவர் கூறினார்.