சென்னை, ஜன. 6 - தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி களை இணையம் வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். இந்நிலையில், ‘நீட்’ தேர்வி லிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மாநில அரசின் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக் கோரி புதனன்று (ஜன.12) நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக சென்னையில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களி டம் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரி யப்பன் கூறியதாவது: ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை 4 மாதங்களை கடந்தும் ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப வில்லை. முதலமைச்சர் 2 முறை ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியபிறகும் ஆளுநர் காலம்கடத்துவது கண்டிக்கத்தக்கது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா தொடர்பாக முறையிட சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது, மாநில அரசையும், மாணவர்களையும் அவ மதிப்பதாகும். ‘நீட்’ தேர்வை ரத்து செய்யா மல் எத்தனை மருத்துவக் கல்லூரிகளை திறந்தாலும் அதனால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு பயனில்லை. கல்வியை 50 வருடம் பின்னோக்கி கொண்டு செல்லும் வகையில் தேசிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு அமல்படுத்து கிறது.
இதற்கு மாற்றாக, தமிழகத்திற் கென்று புதிய கல்விக் கொள்கை உரு வாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித் தது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கா மல் இருப்பது சரியல்ல. ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங் களில் சாதிய, பாலின பாகுபாடு காரண மாக 122 பேர் தற்கொலை செய்துகொண்டு ள்ளனர். ஐஐடியில் நடைபெற்ற மரணங்கள் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகள் அனைத்தும் நிர்வாகத்திற்கு சாதகமாகவே நடந்துள்ளன. இதுபோன்ற கல்விவளாக மரணங்களை தடுக்க இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களை அமல்படுத்த வேண்டும். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம் 225 விழுக்காடு உயர்த்தப் பட்டது. இதற்கெதிராக போராடிய மாண வர்கள் மீது 2 ஆண்டுகளுக்கு பிறகு பழி வாங்கும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடு பட்டுள்ளது. 5 ஆண்டுகள் கல்வியை தொட ரவும், வளாகத்திற்குள் நுழையவும் 11 மாண வர்களுக்கு தடை விதித்துள்ளது. இவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.