tamilnadu

img

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மாணவர் சங்கம் மறியல்

சென்னை, ஜூன் 22- ராணுவத்தில் நிரந்தரப் பணியை ஒழித்துக்கட்டவே அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளதாக மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் குற்றம்சாட்டினார். நாட்டின் பாதுகாப்பை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதனன்று (ஜூன் 22) தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமையில் மாணவர்கள் கூடினர். பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பாரதி, தலைவர் ஆனந்த், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் விக்னேஷ்,தலைவர் மிருதுளா, வடசென்னை மாவட்டச் செயலாளர் நித்திஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் தேச நலனுக்கு, இளைஞர்கள் நலனுக்கு எதிராக அக்னிபாத் என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ராணுவத்தில் நிரந்தரப் பணி என்பதை ஒழித்துக் கட்டி, ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டு,ஒட்டுமொத்த ராணுவ வீரர்களையும் அத்துக் கூலிகளாக மாற்றும் முயற்சி என்று குற்றம் சாட்டினார். நாட்டின் பாது காப்பு கேள்விக்குறியாகும். தேசத்திற்குசேவைசெய்ய வேண்டும் என்றஇளைஞர்களின் லட்சியம் தகர்த்து எறியப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்கு கூடுதலாக பணம் செலவாகிறது எனக்கூறி ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துகிறோம் எனக் கூறுகிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, பெரும்நிறுவ னங்களுக்கு 7 லட்சம்கோடி ரூபாயை ஒன்றிய அரசு வரிச்சலுகையாக அளித்துள்ளது. பெரும் நிறுவனங்கள் வாங்கிய 5 லட்சம் கோடி ரூபாய் கடனைவாராக் கடன்என தள்ளுபடி செய்துள்ளார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய பாஜக அரசு தேசத்தை பாதுகாக்கக் கூடிய ராணுவ வீரர்களுக்குசெலவு செய்ய மறுப்பது ஏன்என்று கேள்வி எழுப்பினார். எனவே நாட்டின் பாது காப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு உடன டியாகக் கைவிட வேண்டும் என்றார்.