மதுரையில் செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை விளாங்குடி பகுதியில் 12ம் வகுப்பு மாணவர் பிரான்சிஸ் எபிநேசர். இவரது தாய் முத்துமாரி. இந்நிலையில் பிரான்சிஸ் எபிநேசர் செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதற்காக அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவர் பிரான்சிஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.