tamilnadu

மாணவி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு, செப். 16- செங்கல்பட்டு அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயம் காரணமாகத் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கமல நாதன் என்பவர் சேத்துப் பட்டு எம்.சி.சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவ ரது மனைவி ஷிபா மாடம்பா க்கத்தில் ஆசிரியராக பணி யாற்றி வருகின்றார். இதே பள்ளியில் இவர்களது மகள் அனுசியா 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.  இந்த நிலையில் அனுசியா கடந்த 12 ஆம் தேதி ஆவடி தேர்வு மையத்தில் நீட் தேர்வு  எழுதியுள்ளார். முதன் முறை யாக நீட் தேர்வு எழுதிய அனு சியா தோல்வி பயம் காரண மாக, வீட்டில் யாரும் இல் லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்  ளார். அருகில் உள்ளவர்கள் தீக்காயம் அடைந்த அனு சியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 40 விழுக்காடு தீக்காயங் களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள மாணவி யை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன் பரசன் நேரில் சந்தித்து ஆறு தல் கூறினார்.

;