டாஸ்மாக் அதிகாரி ஆஜர்
சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கு சம்பந்தமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டாஸ்மாக் அதிகாரியான ஜோதி சங்கர் விசாரணைக்கு ஆஜரானார்.
வெள்ளைத் தாளில் கையெழுத்தா?
சென்னை: திங்களன்று செய்தியாளர்கள் சந்திப்பில், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், “பாமக நிறுவனர் ராம தாஸ்-க்கு பின் கட்சியை வழிநடத்தப் போவது கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்றும், தைலாபுரம் தோட்டம் வந்த மாவட்ட நிர்வாகிகளிடம் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கியதாக பரப்பப்படும் தகவல் வதந்தி” என்றும் தெரிவித்தார்.
“போதையை விரட்ட, விளையாட்டு”
சென்னை: “அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தி லிருந்து இளைஞர்கள் விடுபட, விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். தங்கள் உடல் நலத்தையும் பாது காக்க வேண்டும்” என கன்னியாகுமரி தொகுதி மக்க ளவை உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்தார்.
கோவை, நீலகிரியில் மிக கனமழை
சென்னை: சென்னையில் திங்களன்று செய்தியா ளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தின் தலைவர் அமுதா, “மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மே 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து வலுவடையக் கூடும். செவ்வாய்க் கிழமை (மே 20) கோவையில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தரும புரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
எந்த மோதலும் இல்லை!
புதுச்சேரி: புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் பனிப்போர் நிலவி வருவதாக காங்கிரஸ், அதிமுக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் திங்க ளன்று கூறுகையில், “புதுச்சேரியில் துணைநிலை ஆளுந ருடன் எந்த பிரச்சனையும் இல்லை. மாநில அந்தஸ்து கேட்டு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து அவசியமானது. அரசின் வேகமான செயல்பாட்டுக்கு மாநில அந்தஸ்து கேட் கிறோம்” என்றார்.
உலக சுகாதாரத் துறைக்கு கடிதம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்க, மாநில அரசை வலியுறுத்த வேண்டும்; உயிர் காக்கும் மருத்து வர்களை ஊதியத்திற்காக போராட வைப்பதை உலக சுகா தார நிறுவனம் (WHO) நிச்சயம் அனுமதிக்காது என நம்பு கிறோம் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை உலக சுகாதார நிறு வனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இயல்பைவிட 90% அதிக மழை!
சென்னை: தமிழகத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. மேலும், சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி யில் பதிவான இயல்பான மழையின் அளவு 6 செ.மீ. ஆனால் 28 செ.மீ மழை அதிகமாக பதிவாகி உள்ளதாக தெரி வித்துள்ளது.
மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பு
சேலம்: தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சி யாக பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் திங்களன்று காலை நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 108.82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணை விரைவில் 109 அடியை எட்டும் தருவாயில் உள்ளது.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஜூன் 8 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே 19- 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இளங்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி), தோட்டக்கலை (தமிழ் வழி), வனவி யல், உணவு மற்றும் ஊட்டச்சத்து உணவு முறை, பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை, பி.டெக் வேளாண் பொறி யியல், உணவுத் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரித் தகவலி யல், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம் ஆகிய படிப்பு களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருக்கும் 3,370 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் இருக்கும் 4,405 இடங்களுக்கும் விண்ணப்பிக்க லாம். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோ ருக்கு இட ஒதுக்கீடுகள் உண்டு. tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னான நடைமுறைகள் மற்றும் அதற்குண்டான தேதிகள் அதே இணைய தளத்தில் வெளியிடப்படும். ஆன்-லைனில் வரும் ஜூன் 8 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் உண்டு. ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ப இந்தக் கட்டணம் மாறுபடும்.
பள்ளிக் கல்வித்துறையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு
சென்னை, மே 19 - பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் அமைச்சுப் பணியா ளர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவி யாளர், தட்டச்சர் உள்ளிட்ட அமைச்சுப் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல், தகுதி யானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-26 கல்வியாண்டில் அமைச்சுப் பணி யாளர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவ ணையை பள்ளிக் கல்வித்துறை வெளி யிட்டுள்ளது. அதன்படி அமைச்சுப் பணியாளர் களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை இணையவழி யில் நடைபெறவுள்ளது. இவற்றில் கண்காணிப்பாளர்களுக்கு மாவட்டத்துக் குள் மாறுதல், விருப்ப மாறுதல், மன மொத்த மாறுதல் ஆகியவை மே 26, 29, 30 ஆம் தேதிகளில் வழங்கப்பட இருக் கிறது. அதைத் தொடர்ந்து உதவியாளர் பணியிடத்திற்கு ஜூன் 4 ஆம் தேதியும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பதிவறை எழுத்தர், ஓட்டுநர் ஆகிய பணி யிடங்களுக்கு ஜூன் 6, 9, 11 ஆம் தேதிகளில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப் பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி கலந்தாய்வை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி யுள்ளது.
க்யூஆர் கோடு மூலம் மாணவர் சேர்க்கை
காஞ்சிபுரம்: மற்ற மாநிலங்களை ஒப்பிடுகை யில், கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ் நாடு அரசு, அரசுப் பள்ளி களில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் க்யூஆர் கோடு மூல மாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்கு விக்கும் பொருட்டு, நவீன முறையில் இந்த க்யூஆர் கோடு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளப் பக்கத் தில் இந்த பேனரைப் பகிர்ந்து “சூப்பர்” எனப் பாராட்டியுள்ளார்.
ஆய்வுப் பணியில் தீவிரம்
சென்னை: டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் டாஸ் மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசா கன் வீடு, ஆழ்வார்பேட்டை யிலுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் வெள்ளியன்று திடீர் சோதனை நடத்தி, சம்பந்தப் பட்டவர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தி னர். இச்சோதனை சனிக்கிழமை நிறைவு பெற்றது. இந்நிலையில், சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட நூற்றுக் கணக்கான ஆவணங் களை அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒரு குழு வினர் ஆய்வு செய்து வரு கின்றனர். இந்த ஆய்வுகள் ஓரிரு நாட்களில் முடிவ டையும் என்றும், இந்த ஆய்வுக்குப் பின் கைப் பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப் படும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.