கோவை, பிப்.11- கோவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை சாதிய வன்மத்துடன் அடித்துக் கொன்ற சாதி ஆதிக்கச் சக்தியினரை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் முற் போக்கு அமைப்பினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை, பொன் னாங்காணி என்ற பகுதியை சேர்ந்த வர் ராமு. தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரிடம் அப்பகுதியில் வசிக்கும் சாதி ஆதிக்கச் சக்தியினர் சிலர் சாதிய வன்மத்துடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன்தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியன்று சாதி ஆதிக்க கும்பல் 20-க்கும் மேற்பட் டோர் ராமுவின் வீட்டிற்குள் ஆயு தங்களுடன் அத்துமீறி புகுந்து தாக்கி யுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராமு, ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பல னின்றி வியாழனன்று இரவு ராமு உயிரிழந்தார். இதனால் அவரது உற வினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்த னர். மேலும், சாதிய வன்மத்துடன் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய சாதிய ஆதிக்க சக்தியினர் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
அதுவரை கொல் லப்பட்ட ராமுவின் உடலை பெற மட்டோம் எனக்கூறி ராமுவின் உற வினர்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட தலித், முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தோர் வெள்ளியன்று கோவை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட் டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்டச் செய லாளர் இரா.ஆறுச்சாமி, திராவிட தமி ழர் கட்சியின் தலைவர் வழக்கறி ஞர் வெண்மணி, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சுசி கலையரசன், ஆதித் தமிழர் பேரவையின் ரவிக்குமார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் நேருதாஸ் உள்ளிட்ட பல்வேறு முற் போக்கு அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று,கொலைக் குற்றவாளிக ளை கைது செய்யக்கோரி முழக் கங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை டிஐஜி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் வன்கொ டுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண் டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உடனடியாக உரிய நிவாரண உதவி வழங்கிட வேண்டும். அவரது குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி னர். இதில் மேற்கண்ட கோரிக்கை கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறு தியளித்தனர். இருப்பினும், குற்ற வாளிகள் அனைவரும் கைது செய் யப்படும் வரை ராமுவின் உடலை பெற மாட்டோம் என அவரது உற வினர்கள் உறுதிபட தெரிவித்து போ ராட்டத்தை தொடர்ந்து வருகின்ற னர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.