தில்லியில் தமிழர்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை நிறுத்திடுக!
சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் வலியுறுத்தல்
துதில்லி, மே 30 - தில்லி தமிழர்களின் வீடுகளை இடித்து கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் கொள்கையை தில்லி அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள் ளார்.
இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராஸி குடியிருப்பு பகுதிகளை இடித்து, அங்குள்ள உழைக்கும் வர்க்க மக்களை இடம்பெயரச் செய்யும் புல்டோசர் கொள்கையை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. ஏழைகளுக்கு எதிரான பாஜகவின் கொள்கை இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேசுகையில், “தேர்தல் அறிக்கை யில் குடிசைகள் இருக்கும் இடத்தி லேயே உழைக்கும் ஏழைகளுக்கு வீடு கள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதி யை பாஜக அளித்தது. தற்போது உரிய மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லாமல் குடிசைப் பகுதிகள் இடிக்கப்படு கின்றன. இவ்வாறு குடிசைகள் இடிக்கப் படுவது பாஜகவின் ஏழைகளுக்கு எதி ரான, மக்களுக்கு எதிரான கொள்கை யை அம்பலப்படுத்துகிறது” என்றார். மாற்றுக் குடியிருப்பு வழங்கப்பட வேண்டும் “மறுவாழ்வுத் திட்டங்களின்றி குடிசைகள் இடிக்கப்படுவதால் லட்சக் கணக்கான ஏழைகள், கட்டாய மாக மாநகரத்திற்கு வெளியே இடம் பெயர்வதற்கு வற்புறுத்தப்படு கின்றனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து பாதுகாப்பின்மை உருவாகி யுள்ளது” என்றும்; “இது அரசமைப்புச் சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும்” என்றும் கூறினார். “எனவே, தில்லி தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய உழைக்கும் ஏழை களின் வீடுகளை இடித்து கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் கொள்கையை தில்லி அரசு கைவிட வேண்டும். மாற்று குடியிருப்புகள் அளிக்க வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார். போராட்டம் மேலும் தீவிரமடையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி பிரதேச செயலாளர் அனுராக் சக்சேனா பேசுகையில், “வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு, சிங்காரம் என்ற பெயரில் உழைக்கும் ஏழைகளின் குடிசைகளையும் சிறிய வீடுகளையும் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கும் ஒன்றிய - தில்லி அரசின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. மறு வாழ்வுத் திட்ட கோரிக்கைகளை நிறை வேற்றாமல் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசும் தில்லி அரசும் நிறுத்தா விட்டால் விரிவான போராட்டமாகி தீவிரமடையும்” என்று எச்சரித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர். கருமலையான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சார்ந்த ரிக்தா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் நாராயணன், சிபிஐ எம்எல் சார்பில் சுசேதா தே, ஆர்எஸ்பி சார்பில் சத்ருஜீத் சிங், சிஜிபிஐ சார்பில் பிஜு நாயக், பார்வார்டு பிளாக் சார்பில் ஹரி கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் திரளாக பங்கேற்பு மதராஸ் கேம்பைச் சேர்ந்த தமிழர்களான பழனிவேல், ராஜு, பூமாதேவி, முருகன் ஆகியோரும் பங் கேற்று ஒன்றிய - மாநில அரசுகளை கடு மையாக விமர்சித்தனர். பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த மதராஸ் கேம்பைச் சேர்ந்த சித்ரா, தோபி காட் பட்லா ஹவுஸைச் சேர்ந்த அக்தரி, சூரஜ் பார்க்கைச் சேர்ந்த பஜன் லால், ஜாமியா நகரைச் சேர்ந்த நாஸ், பேலா எஸ்டேட்டைச் சேர்ந்த ரேகா ராஜ்புத், ரோஹிணி 23-ஆவது செக்டரைச் சேர்ந்த ரெஹ்னா, சில்லா காதரைச் சேர்ந்த குட்டு உள்ளிட்டோர் பங்கேற்று பாஜக அரசின் கொள்கைகளை அம்பலப் படுத்தி, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் எடுத்துரைத்தனர். மதக் கோஷம் எழுப்பி சங்பரிவார் இடையூறு போராட்டத்தின்போது, சங்பரி வாரத்தைச் சேர்ந்த நபர்கள் மதம் சார்ந்த கோஷங்களை எழுப்பி இடை யூறு அளிக்க முயன்றனர்.