tamilnadu

சாலை விரிவாக்கம் என கூறி மருதூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கைவிடுக! ஜூலை 8 இல் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சாலை விரிவாக்கம் என கூறி மருதூரில் ஆக்கிரமிப்புகளை  அகற்றுவதை கைவிடுக!  

ஜூலை 8 இல் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் 

அரியலூர், ஜுன் 29-  ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் கிராமத்தில், நீர்நிலை புறம்போக்கு மற்றும் சாலை விரிவாக்கம் என கூறி ஏழை, எளிய மக்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதை தடுத்து நிறுத்தவும், ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிக்கும் போக்கை கைவிட வலியுறுத்தியும் மருதூரில் கிராம பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். மணிவேல் தலைமையில் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, சங்கத்தின் கிளை அமைத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், கூட்டத்தில் ஜூலை 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மருதூர் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.