tamilnadu

img

நந்தனம் அரசுக் கல்லூரியில் மாமேதை காரல் மார்க்ஸ் சிலை

நந்தனம் அரசுக் கல்லூரியில் மாமேதை காரல் மார்க்ஸ் சிலை

சென்னை மாநகராட்சி மன்றம் அனுமதி

சென்னை, ஏப்.30- மாமேதை காரல் மார்க்ஸ் சிலை நந்தனம்  அரசு கலைக் கல்லூரி வளா கத்தில் அமைக்கப்பட உள்ளது. மாமேதை காரல்  மார்க்ஸ்சுக்கு சென்னை யில் முழு உருவச்சிலை அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்பு கள் கோரி வந்தன. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பிப்ரவரி மாதம்  முதலமைச்சரிடம் நேரடியாக மனு அளித் திருந்தார். மேலும், காரல் மார்க்சின் நினைவு தினத்தையொட்டி மார்ச் 13 அன்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் நந்தனம் கல்லூரி யில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த  நிகழ்வில் பங்கேற்ற பெ.சண்முகம், மீண்டும்  வேண்டுகோள் விடுத்தார். இதனையேற்று, ஏப்.3 அன்று சட்டமன்றத் தில் விதி 110-ன்கீழ், மாமேதை காரல் மார்க்ஸ் சிலை சென்னை யில் அமைக்கப்படும் என்று  முதலமைச்சர் அறிவித் தார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் புதனன்று (ஏப்.30)  மேயர் ஆர்.பிரியா தலை மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நந்த னத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாமேதை மார்க்ஸ் திரு உருவச்சிலை அமைக்க தடையின்மை சான்று வழங்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சிபிஎம் நன்றி மாநகராட்சி தடையில்லா சான்றிதழ் வழங்க தீர்மானம் கொண்டு வந்தமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 98  ஆவது வார்டு உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி மேயர் உள்ளிடோருக்கு நன்றி தெரி வித்தார்.