மலப்புரத்தில் பெண் விவசாயத் தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு
அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் பெண் விவசாயத் தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு மே 09, 10 ஆகிய தேதிகளில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணா அருகே இளங்குளத்தில் நடைபெற்றது. மாநாட்டில், 20-க்கும் மேற்பட்ட மாநிலங் களிலிருந்து, 424 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து 40 பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் பெண் விவசாயத் தொழிலா ளர்கள் சந்திக்கும் பாலின பாகுபாடு, ஊதியம் பெறுவதில் உள்ள சமத்துவமின்மை, வேலை, வீடு போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி, ஒருங்கிணைப்பாளர் கோமள குமாரி தலைமையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக லலிதாபாலன் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டி லிருந்து பி.வசந்தாமணி, எஸ்.பூங்கோதை ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பி னர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.