சென்னை, நவ. 1- விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்க ளுக்காக கடந்த 2 ஆண்டுக ளாக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகை யில் இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021- 2022ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில், முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியை வேளாண் பணிகளுக்கு திறம்பட பயன் படுத்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின்கீழ், சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் 70 விழுக் காடு மானியத்தில் நிறுவப் படும். இந்த ஏசி மற்றும் டிசி பம்புசெட்டுக்களை 5 ஆண்டுகளுக்கு இலவ சமாக பராமரிப்பு செய்வ துடன், காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயி கள் உழவன் செயலி மூல மாகவோ, https://pmkusum.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூல மாகவோ விண்ணப் பிக்கலாம். வேளாண்மை பொறியியல் துறை யின் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அல்லது மாவட்ட செயற் பொறியாளர் அலுவல கத்தை அணுகி நேரிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அரசு வெளி யிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.