சென்னை, மார்ச் 17- அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வு அறை கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு காவல்துறை யில் இந்த ஆண்டு ‘பெண் போலீசின் பொன்விழா’ ஆண்டாகும். 1973 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தான் பெண் காவலர்களை நியமித்தார். முதன் முதலில், பெண் காவலர்கள் தொடங்கப்பட்டபோது அதில் ஒரு உதவி ஆய்வா ளர், ஒரு தலைமைக் காவ லர், 20 காவலர் அடங்கிய சிறிய படை மட்டுமே இருந் தது. 22 பேருடன் தொடங் கப்பட்ட பெண் காவலர்கள் தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் தமிழ் நாடு காவல் துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னை பெரியமேடு, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று (மார்ச் 17) நடந்தது. விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் களின் பாதுகாப்பிற்காக ‘அவள்’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
அந்த திட்டத்தின் சின்னத்தையும், சிறப்பு தபால் உறையையும் வெளியிட்டார். மேலும், 100 பெண் காவலர்கள் பங்கேற் கும் மிதிவண்டி ஊர்வலத் தையும் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய முதலமைச்சர், பெண் காவலர்களுக்கான 9 அறி விப்புகளை வெளியிட்டார். இதன் விவரம் வருமாறு:- சென்னை மற்றும் மதுரையில் பெண் காவ லர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். ‘ரோல் கால்’என்ற காவல் வருகை அணி வகுப்பு 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடை பெறும். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வு அறை கட்டித் தரப்படும். தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும். விருது-கோப்பை கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டு தோறும் வழங்கப் படும். பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிட மாறுதல் வழங்குமாறு அறி வுறுத்தல் வழங்கப்படும். பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டு தோறும் நடத்தப் படும். பெண் காவலர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண காவல் துறையில் பெண்கள் என்ற தேசிய மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும். பெண் காவலர்களின் நலனுக்காக பணி ஆலோசனை வழி காட்டுதல் குழு அமைக்கப் படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செய லாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந் திரபாபு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.