மதுரை, டிச.24-- மதுரை பரவை பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் வெ.மகாலிங்கம்( வயது 90) காலமானார். கம்யூனிஸ்ட் கட்சியினை இந்த பகுதியில் உருவாக்கிய முக்கியமானவர்களில் ஒருவரான இவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கிளை யின் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். தேனூர் மில் தொழிலாளியான இவர், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் மற்றும் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி பலமுறை சிறை சென்றவர். மூத்த தலைவர் கே.பி .ஜானகிஅம்மாள் மற்றும் பல தலைவர்களு டன் கட்சி பணியாற்றியவர். அன்னாரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் சி.ராமகிருஷ்ணன், எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி ,முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.ஏ. இளங்கோவன், மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலகிருஷ்ணன், மலர்விழி, ஒன்றியக் குழு உறுப்பினர் து.ராமமூர்த்தி மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.மறைந்த வி.மகாலிங்கத்திற்கு காமாட்சி என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.