சென்னை கலைவாணர் அரங்கில் செவ்வாயன்று நடைபெற்ற தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் - 2024 வழங்கும் விழாவில், சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மாநில அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சுற்றுலா மேம்பாட்டில் முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டதற்காக, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாருக்கு பாராட்டுக் கேடயத்தை வழங்கினர்.