கீழடி ஆய்வுக்கு அறிவியல் ஆதாரம்
அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை, ஜூன் 13 - கீழடி அகழாய்வு குறித்து விரிவான கட்டுரை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான நிலையில், இதை சுட்டிக்காட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அறிவியல் ஆய்வுகளின் உறுதிப்பாடு
கீழடியில் நிலவிய தமிழர்களின் தொன்மை நாகரிகம் பொது யுகத்திற்கு முன்பு ஆறு நூற்றாண்டுகள் பழமை யானது என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் எதிர்ப்பு
உலகின் மூத்த குடியான தமிழர் குடி என்ற வரலாற்று சிறப்புமிக்க உண்மையை உலக அளவில் பல்வேறு அறிக்கைகள் வழி, அறிஞர் பெருமக்கள் உறுதி செய்தா லும், ஆரியக் கண்ணோட்டம் உடையவர்களால் அது ஏற்றுக் கொள்ள முடியாத கசப்பான உண்மையாகவே இருப்ப தாக விமர்சித்துள்ளார். கீழடியால் தமிழரின் பெருமை மேலோங்கும் என்பதை உணர்ந்து, ஒன்றிய பாஜக அரசு கீழடி ஆராய்ச்சியை இடை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், கீழடி ஆராய்ச்சி அறிக் கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காழ்ப்புணர்ச்சி யுடன் நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
வலுவான தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தமிழ் நிலத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றி வரும் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த ஆண்டு அகழாய்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 5 கோடியில் இருந்து, ரூ.7 கோடியாக உயர்த்தி உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.