சென்னை, நவ. 16- திண்டுக்கல் மாவட்டம் தண்டா யுதபாணி திருக்கோயில் நிர்வா கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயி லாக புதனன்று (நவ. 16) தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2022-23ஆம் ஆண்டிற் கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை யில், திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டண மில்லா காலை சிற்றுண்டி வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை நிறை வேற்றும் வகையில், அருள்மிகு பழநியாண்டவர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, அருள்மிகு தண்டா யுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளி கள் மற்றும் பழநி, அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம், அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் பயிலும் 4,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் புதனன்று தொடங்கி வைத்தார். இப்பள்ளி மற்றும் கல்லூரி களில் பயிலும் மாணவர்கள் தொலைவில் இருந்து கல்வி பயில வருகை தருவதாலும், அவர்க ளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் காலை சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் வெண்பொங்கல் மற்றும் இட்லி (அல்லது) ரவா உப்புமா மற்றும் இட்லி (அல்லது) கிச்சடி மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சட்னி, சாம் பார் சுழற்சி முறையில் வழங்கப் படும். இதற்கான செலவினம் திருக்கோயிலின் நிதியிலிருந்து செலவிடப்படும். இதில் அமைச்சர்கள் அர.சக்கர பாணி, பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.