tamilnadu

img

மணல் மாபியாக்களின் ரத்தவெறி - தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் பலி

தூத்துக்குடி, ஏப். 28- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளையர்களால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பிரான்சிஸ் காவல்துறையில் புகாரளித்தும் பலனில்லை. சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டார். இதுமணல் கொள்ளையர்கள் நிகழ்த்திய பழைய சம்பவங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

மிரட்டலிலேயே வாழும் விவசாயி
தூத்துக்குடி மாவட்டம்  முறப்பநாடு அருகே உள்ள அகரத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலகிருஷ்ணன் என்பவர். இன்றைக்கும் தனது கால்நடைகளை ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார்.  இவர் இந்த ஊராட்சியின் முதலாவது வார்டு உறுப்பினரும் கூட.  மணல் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகவும் மணல் கடத்தலுக்கு எதிராகவும் குரல் கொடுத்ததால் சமூக விரோதிகளின் கொலை மிரட்டலுக்கு உள்ளானார். காவல்துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மணல் கொள்ளைக்கு எதிராக முறையிட்டுள்ளார். இந்தப் பின்னணியில் தான் தற்போது அவருக்கு காவல்துறை பாது காப்பு வழங்கப்பட்டுள்ளது. “மூன்று யூனிட் ஆற்று மணலுக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை பேரம் பேசுகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சாதி அமைப்புகளின் தலைவர்களின் ஆதர வுடன் இந்த சட்டவிரோத வியாபாரம் நடத்தப் படுவதால், மணல் மாபியாக்கள் எந்த  எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார் பாலகிருஷ்ணன்.  தூத்துக்குடி மாவட்டம் திருவை குண்டம் அருகே தாமிரபரணி ஆற்றங்கரை யில் முறப்பநாடு அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி மக்கள் ஆற்று மணல்  கொள்ளைக்கு எதிராகப் போராடி வரு கிறார்கள். இதற்குக் காரணம் ஒரு குறிப்பி ட்ட சாதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் இந்த  குக்கிராமத்தில் மணலை வேட்டையாடி யுள்ளனர். இந்தப் போராட்டத்தில் முன் நின்ற வர் கொங்கராயக் குறிச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தேவ சகாயம். இவர் 2014-ஆம் ஆண்டு கொல்லப் பட்டார். தற்போதும் இங்கு மணல் கொள்ளை நடக்கிறது.

சில அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஒரு கும்பல் ஆற்று மணலை 24 மணி நேர மும் கொள்ளையடித்து ஒரே வருடத்தில் பெரும் பணக்காரர்களாகி விட்டார்கள். இப்படி சம்பாதித்த பணத்தின் மூலம்  ஒவ்வொரு நகரத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் ஏராள மான நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் காரர்களாக மாறிவிட்டனர் என்கிறார் திருவை குண்டம் உட்கோட்டத்தில் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரி.  மணல் மாபியாக்களுக்கு எதிராக  அவர் நடவடிக்கை எடுத்த போது ஒரு அர சியல் தலைவரின் மகன்கள் லாரிகளை விடு விக்க வற்புறுத்தியுள்ளனர். பின்னர் அவர் உட்கோட்டத்திலிருந்து மாற்றப்பட்டுள்ளார். சிறப்புப் பிரிவு காவலர் எஸ்.ஜெகதீஷ் துரை (33). திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரியில் உள்ள நம்பியாறு ஆற்றங்கரையில் 2018-ஆம் ஆண்டு மே 6-ஆம் தேதி மணல் அள்ளியவர்களைக் கைது செய்யத் துணிந்த போது, அவர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவர் அடித்தே கொல்லப் பட்டார். நம்பியாறு ஆற்றுப் படுகைப் பகுதியில் 2000-ஆம் ஆண்டு கண்ணநல்லூரைச் சேர்ந்த  தாஸ், 2012-ஆம் ஆண்டு மிட்டாதார்குளத் தைச் சேர்ந்த குமார், 2017-ஆம் ஆண்டு கருங்கு ளத்தைச் சேர்ந்த செல்லப்பா, 2018-ஆம்  ஆண்டு பெருங்குளத்தைச் சேர்ந்த வியா கப்பன் ஆகியோரின் உயிர் பறிக்கப் பட்டுள்ளது. இந்த மரணங்கள் வாகனங்கள் ‘மோதி’ இறந்ததாக கருதப்படுகின்றன என்கிறார் வருவாய்த்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலுவலகத்தில் “கருப்பு ஆடு களுக்கு” எதிராக கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். கருப்பு ஆடுகளின் ஆதரவுடன் தான் இந்த  சட்டவிரோத மணல் கொள்ளை செழித்து வளர்கிறது. ஈவு இரக்கிமின்றி நட வடிக்கை எடுக்கவில்லையெனில் ரத்த வெறி பிடித்த மணல் மாபியாக்களால் இன்னும் எத்தனை நேர்மையாளர்களை அதிகாரிகளை இழக்க நேரிடுமோ என்கிறார் வருவாய்த் துறை அதிகாரி ஒருவர்.