tamilnadu

img

உக்ரைனில் ரஷ்யா ராணுவ நடவடிக்கை

மாஸ்கோ, பிப். 24 - ‘உக்ரைன் ராணுவ மையத்திலிருந்தும் நாஜிமயமாக்கலிலிருந்தும் விலகி நிற்க வேண்டும்’ என்றும் உக்ரைனை ஒரு போதும் ஆக்கிரமிக்கும் திட்டம் மாஸ்கோவுக்கு இல்லை என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.  அதேவேளையில், தற்போதைய சூழ்நிலைமைகளின் அடிப்படையில் தலையீடு செய்கிறோம் என்ற பெயரில் ரஷ்யாவில் அந்நிய நாடுகள் தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும அவர் எச்சரிக்கை விடுத்தார்.  உக்ரைனின் டான்பாஸ் பிரதேசத்தில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை வியாழனன்று அதிகாலை வெளியிட்ட ஜனாதிபதி புடின், ரஷ்ய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள - உக்ரைன் எல்லைக்குள் உள்ள டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசுகளின்  இறையாண்மையை பாதுகாப்பதற்காக அவசரமாக எழுந்துள்ள பிரச்சனையை தீர்க்க முனைகிறோம் என்று கூறினார். “கடந்த 8 ஆண்டு காலமாக உக்ரைனின் டான்பாஸ் பிரதேசத்தில் உள்ள மேற்கண்ட இரண்டு மாகாணங்களும், உக்ரைன் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன;

பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; இரத்தம் தோய்ந்த கொடிய குற்றங்கள் நடந்துள்ளன; ஆயிரக்கணக்கான ரஷ்யக் குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; அவர்களை மீட்பதும் பாதுகாப்பதும் எங்களது உடனடிக் கடமையாக மாறியுள்ளது” என்றும் புடின் கூறினார்.

“ரஷ்யா மீது நேரடித் தாக்குதல் நடத்தினால், எந்த சந்தேகமும் வேண்டாம், அவர்கள் படுதோல்வி அடைவது மட்டுமல்ல; மிக மிக கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்றும் புடின் எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக, உக்ரைனின் எல்லைக்குள் உள்ள டோனட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகிய இரண்டு பகுதிகளையும் தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி புடின், “உக்ரைன் என்பது எங்களது அண்டை நாடு மட்டுமல்ல, எங்களது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். குறிப்பாக டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பிரதேச மக்கள் எங்களது தோழர்கள்; எங்களது குடும்பத்தினர்,

அவர்கள் இரத்தம் சிந்துவதை இனியும் அனுமதிக்கமாட்டோம்” என்று கூறினார். மேலும், “நவீன உக்ரைன் என்பது முற்றிலும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது; இன்னும் சொல்லப் போனால் அது கம்யூனிஸ்ட் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட சொத்து ஆகும். 1917 சோவியத் புரட்சியைத்  தொடர்ந்து நவீன உக்ரைன் உருவானது.  சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, உக்ரைன், அங்குள்ள  மேல்தட்டு வர்க்க தேசியவாதிகளாலும் பெரும் பணக்கார முதலாளிகளாலும் கைப்பற்றிக் கொள்ளப்பட்டது; அந்த நபர்களுக்கு உக்ரைனின் விடுதலையில் எந்தப்பங்கும் இல்லை” என்று குறிப்பிட்ட புடின், இன்றைக்கு உக்ரைன் என்பது மேற்கத்திய நாடுகள் உதவி என்ற பெயரில் அளிக்கும் பல லட்சக்கணக்கான டாலர் தொகையை வாங்கிக் கொண்டு, அணு ஆயுதங்கள் தயாரிப்பது உள்பட நேட்டோ ராணுவத்திற்கு சேவகம் செய்யும் நாடாக மாறியிருக்கிறது என்ற உண்மையை மறந்துவிட மாஸ்கோ தயாராக இல்லை” என்றும் கூறினார்.

“உலகப்போர்” அளவிற்கு ஊதித் தள்ளிய ஊடகங்கள் 

சில மணி நேரங்களிலேயே பின்வாங்கிக் கொண்ட உக்ரைன் துருப்புக்கள்

மாஸ்கோ/கீவ், பிப். 24 - வியாழக்கிழமை அதிகாலை 5.50 மணி.  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனில் ஒரு ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ மேற் கொள்ளப்படும் என்று தலைநகர் மாஸ்கோவில் அறிவிப்பு வெளியிட்டார்.  அதே அதிகாலை 5.00 மணிக்கு உக்ரைனின் பல பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டு வெடித்த தாகவும், உக்ரைன் தலைநகர் கீவ், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மாநகரமான கர்கோவ்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதேவேளை யில் குண்டுவீச்சுக்கள் நடத்தப்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் உலகம் முழுவதும் பரபரப்புச் செய்திகள் ஊடகங்களில் பளீச்சிட்டன. இதேநேரத்தில் கீவ் மற்றும் கர்கோவ் நகரங்களில் உள்ள உக்ரைன் ராணுவ தளங்கள், ரஷ்ய ராணுவ ஏவுகணைத் தாக்குதல் களுக்கு இலக்கானதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறியதாக உலகம் முழுவதும் ஊடகச் செய்திகள் பரப்பப்பட்டன.

உக்ரைன் அரசாங்கமும் ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் ஒடெஸ்ஸா பகுதியில் இறங்கிவிட்ட தாகவும், கர்கோவ் எல்லையைத் தாண்டி உக்ரைனுக்குள் நுழைந்துவிட்டதாகவும் கூறியுள்ளது என்ற செய்திகளும் அதே அதி காலை 5.00 மணிக்கு ஊடகங்களில் பளீச்சிட்டன. இந்தத் தகவல்களில் துவங்கி பிப்ரவரி 24 வியாழனன்று நாள் முழுவதிலும் உக்ரைனை ரஷ்யா தாக்கிவிட்டதாகவும், மிகப்பெரும் படை யைக் குவித்து உக்ரைன் மக்களை கொன்று குவித்துவிட்டதாகவும், ரஷ்யா போர் வெறி யோடு உக்ரைனை இன்னும் சில மணித் துளிகளில் முற்றாக கைப்பற்றப்போவதாகவும் விதவிதமான பிதற்றல்கள், செய்திகள் என்ற பெயரால், முதலாளித்துவ கார்ப்பரேட் ஊட கங்களால் சர்வதேச அளவில் உற்பத்தி செய்யப் பட்டு, உலகம் முழுவதிலும் அனைத்து முத லாளித்துவ ஊடகங்களிலும் பரபரப்பாக ஊதித்தள்ளப்பட்டன.

ஆனால் எந்த ஊடகமும் ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் மிகத் துல்லியமாக நடந்தது என்ன, நடந்து கொண்டிருப்பது என்ன என்பது பற்றி உலக மக்களுக்குத் தெரிவிப்பதில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை.  அதிகாலை 5.50 மணிக்கு ராணுவ நட வடிக்கை என்ற அறிவிப்பை ஜனாதிபதி விளாடி மிர் புடின் வெளியிட்டார் என்ற தகவல்களுக் கும், அதற்கு முன்பே உக்ரைனில் ரஷ்ய ராணு வம் குண்டுவீசி தாக்கிவிட்டது என்ற தகவல் களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் உள்ளன. சமூக ஊடகங்களில் இன்னும் ஒரு படி மேலே போய், உக்ரைன் தலைநகரான கீவ்  நகரத்தைவிட்டு ஆயிரக்கணக்கான வாகனங் களில் மக்கள் ரஷ்யாவுக்குப் பயந்து தப்பித்துச் செல்கிறார்கள் என்பது உள்ளிட்ட அரைகுறை  தகவல்களும் அர்த்தமற்ற அச்சுறுத்தல்களுமாக ஊடகங்களின் பொழுது போனது. உண்மையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆற்றிய உரையிலோ அல்லது வெளியிட்ட உத்தரவிலோ உக்ரைன் மீது போர் என்ற வாசகம் எதுவும் இல்லை. உக்ரைனை ஆக்கிர மிப்பது எங்களது எண்ணமும் அல்ல,

எங் களது திட்டத்திலும் இல்லை என்று புடின் திட்ட வட்டமாக அறிவித்தார். உக்ரைன் நகரங் களையோ, உக்ரைன் மக்களையோ எந்தவிதத் திலும் ரஷ்ய ராணுவம் தாக்கவில்லை.  உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யாவை  ஒட்டியுள்ள டான்பாஸ் என்ற பிரதேசத்தில்தான், அங்குள்ள ரஷ்யர்களை உக்ரைன் ராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அப்பகுதியில் ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புடின் அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு குறிப்பிட்ட அப்பகு திக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்தது.

டான்பாஸ் பிரதேசத்தின் முக்கியத்துவம் ரஷ்ய ஜனாதிபதி, உக்ரைனின் டான்பாஸ் பிரதேசத்தில் உள்ள ரஷ்யர்களுக்காக ஏன் படை களை அனுப்பினார் என்பது மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த கேள்வியாகும். இந்தக் கேள்வி  பற்றி உலகின் எந்த ஊடகமும் வாய் திறக்க வில்லை. உக்ரைனின் டான்பாஸ் பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக 15லட்சத்திற்கும் அதிகமான ரஷ்யர்கள் வசிக்கிறார்கள். இப்பிரதேசத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று டோனட்ஸ்க்;  மற்றொன்று லுகான்ஸ்க். இந்த இரண்டு மாகா ணங்களும், 2014ஆம் ஆண்டில் உக்ரைனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் அரசாங்கத்தை அமெ ரிக்க சிஐஏ-வின் தூண்டுதலுடன் செயல்படத் துவங்கிய நவீன பாசிச வலதுசாரி பிற்போக்கு சக்திகள் கலகம் செய்து, தலைநகர் கீவ் உள்பட பல இடங்களில் பெரும் கலவரத்தை தூண்டி, அந்த அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், உக்ரைனிலிருந்து தனித்து  வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்தன. டோனட்ஸ்க் மக்கள் குடியரசு என்றும் லுகான்ஸ்க்  மக்கள் குடியரசு என்றும் இரு மாகாணங்களும் தங்களை தனி நாடுகளாக அறிவித்துக் கொண்டன. இந்த இரண்டு மாகாணங்களிலும் பெருவாரியான மக்கள் ரஷ்யர்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதன்பிறகு, உக்ரைனில் அதிகாரத்திற்கு வந்த வலதுசாரி அமெரிக்க கைக்கூலிகளின் அரசு, மேற்கண்ட இரண்டு மாகாணங்களிலும் மிகக் கொடூரமான தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டு களில் 15 ஆயிரம் மக்கள் இவ்விரண்டு மாகா ணங்களிலும் கொல்லப்பட்டார்கள். இவ்விரண்டு மாகாணங்களையும்  தனி குடியரசுகளாக அங்கீ கரிக்க வேண்டும் என்று அங்குள்ள ரஷ்ய மக்கள்,  ரஷ்யாவின் புடின் அரசிடம் தொடர்ந்து வேண்டு கோள் விடுத்து வந்தார்கள். எனினும் உக்ரைனின் இறையாண்மை என்ற பிரச்சனை எழுந்துவிடக் கூடும் என்ற எண்ணத்தால், அவர்கள் ரஷ்யர்கள் என்ற போதிலும் தனி நாடுகளாக அங்கீகரிக்காமல் இருந்து வந்தது.  இந்த நிலையில், சமீபகாலமாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணி யில் உக்ரைன் இணைந்து கொள்ள வேண்டும்  என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. உக்ரைனில் உள்ள ஜனாதி பதி வோலடிமிர் ஜெலன்ஸ்கி தலைமையிலான வலதுசாரி நவீன பாசிச அரசாங்கமும் அமெரிக்காவின் கட்டளையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, நேட்டோவில் இணைய துடித்து  வருகிறது. உக்ரைன் நேட்டோவில் இணைவது, முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் நேட்டோ கூட்டணி செய்து கொண்ட ஒப்பந்தத் திற்கு எதிரானது என்றும், அன்றைய கிழக்கு ஜெர்மனி எல்லைக்கு அப்பால் சோவியத் குடி யரசு நாடுகள் உள்ள பகுதிகளில் நேட்டோ ராணு வக் கூட்டணியை விரிவாக்கம் செய்யக்கூடாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமை யாக எதிர்த்தார். இந்தப் பிரச்சனையை மைய மாகக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக மூன்றாம் உலகப் போர் என்ற அளவுக்கு அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த சில மாதமாக போர்வெறிக்கூச்சல் போட்டு வந்தார். 

இத்தகைய பின்னணியிலேயே, ரஷ்யாவை ஆத்திரமூட்டும் விதத்தில், உக்ரைனில் ரஷ்யர்கள் அதிகமாக உள்ள டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்கள் மீது உக்ரைன் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்த ஆரம் பித்தது. இந்தத் திடீர் தாக்குதலால் திகைத்துப் போன மேற்கண்ட இரண்டு மாகாணங்களின் மக்க ளும், ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினர். சில நாட்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். தங்களை உடனடியாக உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாக்குமாறும் தங்களை தனி குடியரசுகளாக அங்கீகரிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.  இந்த வேண்டுகோள்களின் பின்னணியிலும், நேட்டோ விவகாரத்திற்காக ரஷ்யாவை ஆத்திர மூட்டுவதற்காகவே ரஷ்யர்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துகிறது என்பதை உணர்ந்ததா லும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, மேற்கண்ட இரண்டு மாகாணங்களையும் தனி குடியரசுகளாக ரஷ்யா அங்கீகரிக்கிறது என ஜனாதிபதி புடின் அறிவித்தார். இதற்கான தீர்மா னத்தை ரஷ்ய நாடாளுமன்றம் பிப்ரவரி 23 புத னன்று இரவு ஏகமனதாக நிறைவேற்றியது. இவ் விரண்டு குடியரசுகளும் அமைந்துள்ள டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் அறிவிப்பை புடின் வெளியிட்டார்.

உக்ரைன் ராணுவத்தினர் ஓட்டம்

இதைத் தொடர்ந்து டான்பாஸ் எல்லையை யொட்டியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் உக் ரைன் ராணுவத்தினரின் நிலைகளை குறி வைத்து ரஷ்ய ராணுவத்தினர் நகரத் துவங்கினர். உக்ரைன் ராணுவத்தினர் சில மணி நேரம் தற்காப்புத் தாக்குதல் நடத்தினர். எனினும் ரஷ்ய ராணுவப் படையினர், உக்ரைன் ராணுவ முகாம்க ளை முற்றுகையிட்டு நிலைகுலையச் செய்தனர். முன்னதாக வியாழனன்று அதிகாலை ராணுவ நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி புடின், உக்ரைன் ராணுவத்தினருக்கும் மக்களுக்கும் ஒரு வேண்டுகோளையும் விடுத் தார். உக்ரைன் ராணுவத்தினர் தங்களது ஆயுதங்க ளை கீழே போட்டுவிட்டு தங்களது ராணுவ நிலைகளிலிருந்து வெளியேறினால் அவர்கள் பாதுகாப்புடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்; இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.  இந்த நிலையில், டான்பாஸ் பிரதேசத்தில் ரஷ்யாவின் நடவடிக்கையை எதிர்கொள்ள முடி யாது என்பதை உணர்ந்த உக்ரைன் ராணுவத்தி னர், சில மணி நேரங்களிலேயே அங்கிருந்து வெளி யேறத் துவங்கினர். ஆங்காங்கே உக்ரைன் ராணுவ முகாம்களிலிருந்து ஆயுதங்களை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் வாகனங்களில் அணிவகுத்து உக்ரைனின் உள்பிரதேசங்களை நோக்கி செல்லத் துவங்கினார்கள்.  

(இடார் - டாஸ், ஆர்.டி.நியூஸ், பிராவ்தா)