மதுரை, ஜன.12- மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான காளைகள் பதிவு ஜனவரி 13-ஆம் தேதி காலை ஒன்பது மணி முதல் அவனியா புரம் கால்நடை மருந்தகத்தில் நடைபெறும். ஜனவரி 16-ஆம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டிற்காக பாலமேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் காளைகள் பதிவு செய்யப்படும். ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டிற்காக இங்குள்ள ஊராட்சி ஒன்றிய பெண்கள் அரசி னர் மேல்நிலைப்பள்ளியிலும் காளைகள் பதிவு நடை பெறும்.ஒவ்வொன்றிலும் முறையே 700,650,700 என்ற எண்ணிக்கையில் காளைகள் பதிவு செய்யப்படும். ஆர்வமுள்ள காளை உரிமையாளர்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, தமிழ்நாடு கால்நடை பராம ரிப்புத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வழங்கிய காளை அடையாள சான்று அசல் மற்றும் ஒரு நகலுடன் சம்பந்தபட்ட மையங்களை அணுகலாம். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரி வித்துள்ளார்.