சென்னை, டிச. 15- குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 14 விழுக்காடு அகவிலைப்படியை 9 மாத கால நிலுவை வழங்காமல் உள்ளதால் சென்னை சேப்பாக்கத் திலுள்ள தலைமை அலுவலகம் அருகே வியாழனன்று (டிச. 15) தர்ணா நடைபெற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த இந்த தர்ணாவுக்கு மாநிலத் தலைவர் செ.ஆஞ்சி தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் வி.குமார், சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஆத்மநாதன், மாநில பொதுச் செயலாளர் சீ.லோகநாதன், மாநிலப் பொருளாளர் எம்.மலைராஜன், முன்னாள் மாநில பொதுச் செயலா ளர் பி.கே.வேலு ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் மாநிலம் முழுவதிம் இருந்து ஏராளமா னோர் கலந்து கொண்டனர். 1971ஆம் ஆண்டில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணா நிதியால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கப்பட்டது.
அன்று முதல் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை 50 ஆண்டுகளுக்கு, மேலாக சிறந்த முறையில் செயல் படுத்தி வருகிறோம். விலைவாசி உயர்வு காரணமாக ஒன்றிய, மாநில அரசு ஊழியர்க ளுக்கும், ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அக விலைப்பட்டியலை 6 மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழக அரசு ஆணைகளை முழுமை யாக பின்பற்றி ஊதியக்குழு பரிந்துரைகள், பணப் பயன்கள், ஓய்வு கால பணப்பயன்கள் உள்ளிட்ட அனைத்தும் கடந்த ஆண்டு டிசம்பர் வரை எந்த பாகுபாடுமின்றி வழங்கப் பட்டது. இந்நிலையில், 14 விழுக்காடு அக விலைப்படி மற்றும் 9 மாத கால நிலுவைத் தொகையை ஓய்வூதியர்க ளுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் வழங்க மறுக்கிறது. மேலும் தமிழக அரசும், வாரியமும் நிதி நிலையை காரணம் காட்டி 3 விழுக்காடு அக விலைப்படியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. எனவே, 1.7.2022 முதல் உயர்த்தப் பட்ட 3 விழுக்காடு அகவிலைப்படி யையும் நிலுவையுடன் உடனடியாக வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் காலம் தாழ்த்தா மல் பணப் பயன்களையும், ஓய்வூதியத் தையும் வழங்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.