பாஜக மூத்த தலைவர் எடி யூரப்பா கர்நாடக முதல்வ ராக இருந்த பொழுது கொரோனா தடுப்புப் பணியில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் நிகழ்ந்ததாக புகார் எழுந்தது. அதாவது கொரோனா காலத்தில் பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் வாங்கிய தில் பெருமளவு முறைகேடு செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தை ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா விசாரணைக் குழு விசாரித்து வந்தது. இந்நிலையில், கொரோனா ஊழல் தொடர்பாக மைக்கேல் டி.குன்ஹா விசார ணைக் குழு அறிக்கை வெளியிட்டுள் ளது. அதில்,”கடுமையான சட்ட விரோ தங்கள், முறைகேடுகள் மற்றும் ஊழல் கள் ஒவ்வொன்றும் வெளிக்கொணரப் பட்டுள்ளன. இதனால் விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என பரிந்து ரை செய்துள்ளது.