திருச்சிராப்பள்ளி, பிப்.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறு கிறது. இதனையொட்டி, கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில், அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் வெள்ளியன்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ரெங்கராஜன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. பால பாரதி, மாநில கட்டுப்பாட்டுக்குழு தலை வர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜா ஆகியோர் பேசினர்.
மதவெறி கருத்துக்களுக்கு எதிராக வலுவான பிரச்சாரம் தேவை
கூட்டத்தில் மாநாட்டு நிதியை பெற்றுக் கொண்டு மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் பேசியதாவது: அயோத்தியை பயன்படுத்தி இந்தி யா முழுவதும் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றினார்கள். அதே போல தமிழகத் தில் திருப்பரங்குன்றத்தை மையப் படுத்தி ஒரு மதக்கலவரத்தை உரு வாக்கி மக்கள் மத்தியில் பிரிவினை யை உண்டாக்கி தங்களுடைய அர சியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவ தற்காக திட்டமிட்டு செயல்படுகி றார்கள். திருப்பரங்குன்றத்தை இன்னும் ஒரு அயோத்தியாக மாற்ற முயற்சிக்கின்றோம் என பகிரங்கமாக மத வெறியை தூண்டக் கூடிய வகை யில் எச். ராஜா பேசி உள்ளார். இது ஒரு சோதனை முயற்சி என்ற முறையில் எடுத்துக் கொண்டால்கூட மிக மிக ஆபத்தான போக்கு தமிழ கத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆகவே, அவர்களை விட இன்னும் தீவிரமாக நாம் மதச்சார்பற்ற சக்திகளையும், மதச் சார்பின்மை கருத்துக்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும், மதச் சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்ப திலும் மிக மிக அவசரமான ஒரு பணி நம் முன்னால் இருக்கிறது. ஆகவே, இந்த மாநாட்டு பிரச்சாரத்தை எடுத்துச் செல்லும் போது, ஆர்எஸ்எஸ், பாஜக கும்பலின் இந்த பிரிவினைவாத மதவெறி கருத்துகளுக்கு எதிராக வலு வான கருத்து பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். கூட்டத்தில், வரவேற்புக்குழு தலை வராக எஸ். ஸ்ரீதர், செயலாளராக கோவி. வெற்றிச்செல்வம் உள்பட 105 பேர் கொண்ட வரவேற்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். ரேணுகா, பா. லெனின், என். கார்த்திகேயன், வி. மணி மாறன், பகுதிக்குழு செயலாளர்கள் எஸ். சுந்தர்ராஜன், எம். மணிமாறன், எஸ். சுரேஷ், டி. விஜயேந்திரன், வி. சீனி வாசன், எஸ். ஏழுமலை உள்பட மாவட் டக்குழு உறுப்பினர்கள், பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர்.