tamilnadu

img

சாலை வசதி இல்லாததால் வாசகர்கள் அவதி குடவாசல் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் தேவை சிபிஎம் வேண்டுகோள்

சாலை வசதி இல்லாததால் வாசகர்கள் அவதி குடவாசல் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் தேவை  சிபிஎம் வேண்டுகோள்

திருவாரூர், ஜுன் 10-  குடவாசல் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் மற்றும் புதிய சாலை  வசதி ஏற்படுத்தி தந்து, பொதுமக்க ளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சிபிஎம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  திருவாரூர் மாவட்டம் குடவாசல்  கிளை நூலகம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேர நூலகமாக இயங்கி வருகிறது. இந்த நூல கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்கள் புரவலராகவும், 6 ஆயி ரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பி னர்களாகவும் உள்ளனர். இங்கு தினமும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.  இந்நிலையில், இந்த நூல கத்தில் போதுமான இடவசதி இல்லாததால் வாசகர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். நூலக கட்டிடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டி டம் சேதமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு கட்டிடம் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளது. மாற்று கட்டிடம் அருகில் இருக்கும் மற்றொரு கட்டிடத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் அக்கட்டி டத்தில் போதுமான இடவசதி இல்லா மல் உள்ளது. நூலகத்தில் வாச கர்கள் அமர்ந்து படிக்க போதிய  இடவசதி இல்லை. கணினி வசதி இருந்தும் போதிய இடவசதி இல்லா மல் கணினி அறையை பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும் நூல கத்திற்கு சரியான சாலை வசதி இல்லாததால் குறுகலான பகுதி யில் வாகனங்களை திருப்ப முடியா மல் அவதிப்படுகின்றனர். மழை  நேரங்களில் சாலை சேறும் சகதி யுமாக இருப்பதால் நூலகத்திற்கு வாசகர்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.  எனவே சேதமடைந்த பழைய நூலகத்தை இடித்துவிட்டு புதிய நூலக கட்டிடம் கட்டித்தரவும், போதிய சாலை வசதி ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல முறை  இது தொடர்பாக மாவட்ட நூலக துறைக்கு, வாசகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதைப் பற்றி குடவாசல் சிபிஎம்  நகரக்குழு செயலாளர் டி.ஜி.சேகர் கூறும்போது, மேற்கண்ட கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அதேபோல் நூலகத் துக்குச் செல்வதற்கு குடவாசல்-திருவாரூர் சாலையில் அமைந்துள்ள  காந்தி பூங்கா அருகில் ஓடும் சின்னாறு கரை ஓரமாக நூல கத்திற்கான பாதையை சீர் செய்து, நூலகத்துக்கு புதிய தார் சாலை அமைக்கலாம். மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பாதையை ஆய்வு செய்தும், வாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய கட்டி டம் மற்றும் புதிய சாலை வசதியை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.