தலைநகர் தில்லியில் காவல்துறையின் இளம்பெண் உயர் அதிகாரி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். கொடூரமான இச்சம்பவத்தைக் கண்டித்தும் நீதி கேட்டும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், முஸ்லிம் ஜமாத் இணைந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் வி.ஏ.விஸ்வநாத் தலைமையில் துவக்கிவைத்து ஜமாத் தலைவர் காதர் பேசினார். ஆலிம்ஷா , டாக்டர் ராதாகிருஷ்ணன் பள்ளி தாளாளர் பாபு ராஜேந்திரன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ் லட்சுமி, மாவட்ட செயலாளர் தெய்வானை உள்ளிட்டோர் பேசினர். கணிசமான இஸ்லாமியப் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.