tamilnadu

கே-ரயிலுக்காக கேரள அரசு நிலம் எடுக்கலாம்

கொச்சி, ஜன.9- கே-ரயில் நிறுவனம் செயல்படுத்திவரும் சில்வர் லைன் திட்டத்துடன் ஒன்றிய அரசும் ரயில்வேயும் கைகோர்த்துள்ளன. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சமூக தாக்கத்தை மதிப்பிடுவதற்கு ரயில்வேயின் அனுமதி தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் ரயில்வே தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவில் ரயில்வே தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கே-ரயில் என்பது ரயில்வே மற்றும் மாநிலத்தின் கூட்டு முயற்சி என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. சில்வர் லைன் ஒன்றிய அரசின் திட்டம் என்றும், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட கேரள அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 நில உரிமையாளர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.நகரேஷ் தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தார்.