நாகர்கோவில், ஜுன் 21- குமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களை தூர்வாராதது ஏன்? என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். குமரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் வியாழனன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வரு வாய் அதிகாரி ரேவதி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வேத அருள்சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குண பாலன், மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்க பிரதி நிதிகள் முருகேசபிள்ளை, விஜி, அந்தோணி, சண்முகம்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் தெரிவித்த விவரம் வருமாறு:
அணை திறப்பு எப்போது?
ஆண்டுதோறும் கோடை காலத்தில் பாசனக்கால்வாய்கள் தூர்வாரப்படு வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை பாசனக் கால்வாய்களை தூர்வாராதது ஏன்?. தூர்வாரப்படாத தால் அணைகள் திறக்கப்படும்போது தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படும். வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை அணை பாசனத்துக்காக திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இது வரை திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும்? சுசீந்திரம் மற்றும் தேரூர் குளங்கள் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறி விப்புக்கு பிறகு பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்த குளங்க ளை வனத்துறை தனது கட்டுப்பாட் டுக்குள் வைத்துள்ளது. மேலும் இந்த குளங்களில் பழுதடைந்த ஷட்டர்க ளை சீரமைக்கக்கூட பொதுப்பணித் துறையை வனத்துறை அனுமதிப்ப தில்லை. எனவே யாருடைய கட்டுப்பாட் டில் இந்த குளங்கள் உள்ளன? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். மாத்தூர் தொட்டிப்பாலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சுற்றுலாப்பயணி களுக்கான நுழைவுக்கட்டணம், வாக னங்களுக்கான பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கான ஏலத்தை அந்தந்த ஊராட்சிகள் நடத்துகிறது. இவ்வாறு வருவாயை பெறும் ஊராட்சிகள் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளரும் செடி கொடிகளைக்கூட அகற்றுவ தில்லை. இதுதொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாத்தூர் தொட்டிப்பாலம் அமைந்துள்ள பகுதியில் அந்த பாலத்தை கட்டிய காமராஜரின் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வழிச்சாலை பணிக்காக குளங்களில் மண் கொட்டு வதை நிறுத்தி பாலம் வேலையை விரைவுபடுத்த வேண்டும். சுங்கான் கடை குளத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டுமானம் அகற்றப்பட வேண்டும். குளங்களை தூர்வாரி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க கல்குளம், தோ வாளை தாலுகாக்களில் தாசில்தார்க ளால் அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான மனுக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
அதிகாரிகள் விளக்கம்
பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் பதிலளிக்ளையில் வழக்கமாக குமரி மாவட்ட ஒப்பந்ததாரர்கள் தங்களது பதிவு புதுப்பிப்பை ஒவ்வொரு ஆண்டும் வருமானவரி தாக்கல் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் அல்லது நெல்லையில் உள்ள கண்காணிப்பு பொறியாளரிடம் புதுப்பிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு சென்னையில் உள்ள முதன்மை தலைமைப் பொறியா ளரிடம் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் வழக்கு தொடர்ந்த னர். இதனால் ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு ஒப்பந்ததாரர்கள் யாரும் புதுப்பிக்கவில்லை. இதனால் பாசனக் கால்வாய்களை தூர்வார டெண்டர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் இம்மாதம் முதல் வாரத்தில் அணைகளை திறக்க முடிய வில்லை. சில நாட்களில் மழை பெய்தால் தான் அணைகளை திறந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும். அதனால் வருகிற 26-ந் தேதி அணைகளைத் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்ப உள்ளோம். அரசு உத்தரவிட்டதும் அணைகள் திறக்கப்படும் என்றார்.
வண்டல் மண் எடுக்க அனுமதி குறித்து ஆட்சியர் கூறுகையில் பறவை கள் சரணாலயமாக அறிவிக்கப் பட்டுள்ள தேரூர் சரணாலயத்தின் மூலம் வனத்துறைக்கு என்ன அதிகாரம் பொதுப்பணித்துறைக்கு என்ன அதிகா ரம் என்பதை பார்த்து அதிகாரத்தை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப் படும். மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வர்ணம் பூசுவது, செடிஇ கொடிகளை அகற்றுவது தொடர்பாக உள்ளாட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். குளங்களை தூர்வாரி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க நிலுவையில் உள்ள மனுக்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக கடந்த நெல் அறுவடை பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் கொள் முதல் செய்தமைக்காக விவசாயிகள் சார்பில் கலெக்டருக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது. கடந்த கூட்டத்தில் விவசாயி களிடம் இருந்து பெறப்பட்ட 93 மனுக்களுக்கு அதிகாரிகளால் பதில்கள் தெரிவிக்கப்பட்டது.