tamilnadu

கலந்தாய்வு அட்டவணையை வெளியிடுக: இடை நிலை ஆசிரியர் சங்கம்

சென்னை,பிப்.4- தமிழ்நாட்டில் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் நடந்து வரும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணையை போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என்று  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செய லாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில், கடந்த ஜனவரி 24ஆம்  தேதி முதல் தொடக்கக் கல்வித் துறையி லும் பள்ளிக் கல்வித் துறையிலும் அனைத்து  நிலை ஆசிரியர்களுக்கும் விருப்ப மாறுதல்  கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டு தொடர்ந்து கலந்தாய்வு நடந்து கொண்டி ருக்கிறது. ஆனால், பள்ளிக்கல்வித்துறையில் அரசு  உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரிய ர்களுக்கு கலந்தாய்வு அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான தேதி இடம் பெறவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காத பட்சத்தில் இவ்வாண்டு கண்டி ப்பாக நடைபெறும் என எண்ணிக்கொண்டி ருந்த இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளார்கள்.

இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 6,00,000 மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளார்கள். பள்ளிக்கல்வித் துறையில் 6,7,8  வகுப்புகளுக்கு 1:35  என்ற விகிதத்திலும் 9,10 ஆம் வகுப்புகளுக்கு 1:40 என்ற விகிதத்திலும் பட்டதாரி பணியிடம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 8,646  பட்டதாரி பணியிடம் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பணி நியமனம் இல்லாமல் முடிவுறு தொகுதியில்  பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 18 ஆண்டு களாக இடைநிலை ஆசிரியராகப் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விகிதாச்சார அடிப் படையில் பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும் அவ்வாறு அளிக்கவில்லை. தற்ச மயம் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக் கான முழுக் கல்வித் தகுதியுடன் 4,761 நபர்கள்  உள்ளார்கள். எனவே, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 8,646  பட்டதாரி பணியிடத்திலும் 5,037 காலிப்பணியிடத்திலும்  அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

புதியதாக நிர்ணயம் செய்யப்பட்ட 8,646 ல் 50 விழுக்காடு 4,323 மற்றும் 5,037 காலிப்பணியிடம் மொத்தம் 9360 பணியிடங்கள் உள்ளது. 5,000க்கு குறைவான இடைநிலை ஆசிரியர்களை உள்ளனர். எனவே அரசும் பள்ளிக்கல்வித்துறையும் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு எவ்வித நிதிச்சுமை ஏற்படாது. 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வு இவ்வாண்டு கண்டிப்பாக அரசு நடத்தும் என்று எண்ணியிருந்த இடைநிலை ஆசிரி யர்களுக்கு   இவ்வாண்டும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. எனவே பள்ளிக் கல்வித் துறை இந்த ஆண்டு பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்த முன்வர வேண்டும். தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் கலந்தாய்வு அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தேதியை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.