சிபிஎம் தோழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூன் 24- மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்ப வத்தைக் கண்டித்து, தருமபுரி மற்றும் ஈரோட்டில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் தழுவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் ஒருபகு தியாக திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியிலும் பிரச்சாரம் நடைபெற் றது. அப்போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள், உள்ளே புகுந்து கட்சி தலைவர்கள் மீது தாக் குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி யின் மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், சி. நாகராஜன், வே.விசுவநாதன், ஆர். மல்லிகா, ஜி.சக்திவேல், இடைக் கமிட்டிச் செயலாளர்கள் ஜீவானந் தம், சக்திவேல், செல்வம், கார்ல் மார்க்ஸ், தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரவி, சின்னசாமி, ஜெயா, சக்கரவர்த்தி, ராமச்சந்தி ரன், முருகன், கந்தசாமி, ராஜி, கலாவதி, சக்கரைவேல், வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு மாவட் டம், பவானி, அந்தியூர் பிரிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் திற்கு தாலுகா செயலாளர் ஆர்.பிர காஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், கவுன்சிலர் கே.விஜயலட்சுமி, தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.