tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களை சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாத்திடுக

சென்னை, ஜூன் 20- சமூக விரோதிகளிடமிருந்து ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்  மாநில சம்மேளனம் சார்பில் மாநிலம்  முழுவதும் மண்டல அலுவலகம்  முன்பு செவ்வாயன்று (ஜூன் 20)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு சிஐடியு மாநில துணைத் தலைவர் பா.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்து பேசினார். சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் கே.பி.ராமு, பொருளா ளர் ஜி.சந்திரன், துணைத் தலைவர் ஜி.சதீஷ், செயலாளர் எஸ்.வடிவேலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சம்மேளன பொதுச்செயலாளர் கே.திருச் செல்வன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். கே.திருச்செல்வன் பேசுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” என்றார்.

டாஸ்மாக் குறித்து பொது தளத்தில் எழுந்திருக்கும் விமர்சனங் களை அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு அனைத்து டாஸ்மாக்  கடைகளையும் நவீனப்படுத்தி  அனைத்து வாடிக்கையாளர் களுக்கும் பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். டாஸ்மாக் ஊழியர்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் உரிய சமூக விரோதிகள் மீது காவல் துறை யினர் விரைந்து நடவடிக்கை எடுப்ப தில்லை. எனவே டாஸ்மாக் ஊழியர் களை சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க அரசும், காவல் துறையும் முன்வர வேண்டும். சமூக விரோதி களின் தாக்குதலால் இறக்கும் தொழி லாளிக்கு வழங்கும் இழப்பீட்டை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மாநிலக் குழு உறுப்பினர் கே.புஷ்பராமன், மாவட்ட நிர்வாகி கள் பி.பாக்கியராஜ், எஸ்.போஸ்,  எஸ்.சீனிவாசன் (தென்சென்னை), பி.சுந்தரம், எஸ்.பூராசாமி, பி.வடிவேல் (மத்திய சென்னை), டி.நீலகண்டன், வி.எஸ்.பன்னீர் செல்வம், வி.ரமேஷ் (காஞ்சிபுரம் வடக்கு), ஜி.தசரதன், ஆர்.கார்த்தி கேயன் (காஞ்சிபுரம் தெற்கு), ஜி.வெங்கடேசன், ஜி.ரவிச்சந்திரன் (திருவள்ளூர் மேற்கு), பி.நந்த கோபால், ஆர்.மோகன், எஸ்.முரு கேசன் (திருவள்ளூர் கிழக்கு) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.