சென்னை, நவ. 21- எந்தத் திட்டமாக இருந் தாலும் அதனுடைய செயல் பாடுகள் கடைக்கோடி மக்க ளையும் சென்றடைய வேண் டும் என்பதே நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு வின் மாநில அளவிலான 2ஆவது ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைவருக்கு மான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி என்ற உன்ன தமான நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண் டிருக்கிறது. வளர்ச்சி என்பது தீர்மானிக்கப்படாமல், மக்க ளின் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும். இதில் மிக முக்கியமா னது கிராமப்புற வளர்ச்சி. கிராமப்புறப் பிரச்சனை களை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும். அந்த வகையில் கிராமப்புற மக்க ளின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் களால் ஒவ்வொரு ஆண்டும் தொகுதிக்காக ஒதுக்கப் படும் ரூ.5 கோடி நிதி மூல மாக பல்வேறு பணிகள் ஊரகப் பகுதியில் நிறை வேற்றப்படுகிறது.
பொதுமக்கள் அனை வருக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண் டும் என்பதே தேசிய நல் வாழ்வுக் குழுமத்தின் நோக் கம். தமிழகத்தைப் பொறுத் தவரைக்கும், மக்களைத் தேடி மருத்துவம், இன்னு யிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48, மனம் – மனநலத்தை மேம்படுத் துதல், காசநோய் இறப் பில்லாத் திட்டம், நடமாடும் மருத்துவக் குழு, நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத் தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்துடன் செயல்படுத்தப்பட்டு வரு கின்றது. மாநிலத்தின் அனைத்து குடும்பத்தி னருக்கும் உணவு பாது காப்பினை உறுதி செய்தி டும் பொருட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் அரிசி, கோதுமை விலையில்லாமல் வழங்கப் பட்டு வருகிறது. 50 விழுக்காட்டுக்கும் மேல் ஆதிதிராவிடர் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒருங்கி ணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய பிரதமரின் முன் னோடி கிராமத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. எந்தத் திட்ட மாக இருந்தாலும் அதனு டைய செயல்பாடுகள் கடைக் கோடி மக்களையும் சென்ற டையவேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்.