தனியார் நிதி நிறுவன ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, தனியார் நிதி நிறுவன ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆயுதக்களம் செங்கால் ஓடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதை அறிந்த ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினர், சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முதற்கட்ட விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கஞ்சனூர் மேலவீதியைச் சேர்ந்த சிவா(30) என்பதும், தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்வதும் தெரியவந்தது. இவர், பிப்.28 ஆம் தேதி, அணைக்கரைப் பகுதிகளில் வசூல் பணியில் இருப்பதாக கூறிச் சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது பெற்றோர் மார்ச் 1 ஆம் தேதி, பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை எனக் கூறி புகார் அளித்தனர். தற்போது அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 2- ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் அத்திகுளம் தேவேந்திரி கிராமத் திற்கு உட்பட்ட பகுதியில் தனியா ருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை அருகே நீர் நிலை புறம் போக்கில் கடை கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இது வருவாய்த் துறையின ரால் கண்டுபிடிக்கப்பட்டு கடையை அகற்ற கூறியும் முறை யாக அகற்றாததால் வருவாய் துறை சார்பில் வருவாய் ஆய்வா ளர் மலர்பாண்டி தலைமையில் வருவாய் நீர்நிலை புறம்போக் கில் கட்டப் பட்டிருந்த கடையை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டதை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய சார்பு ஆய்வா ளர் ஜோதி தலைமையில் பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.