tamilnadu

img

விளையாட்டு

முதன்முதலாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கிய ஜனாதிபதி

23ஆவது சீசன் உலகக்கோ ப்பை கால்பந்து போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. தற்போது இந்த தொடருக்காக உலகம் முழுவதும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதனன்று நள்ளிர வில் நடைபெற்ற ஆசியக் கண்டத்திற் கான உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் - கத்தார் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் 3-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, உலகக்கோப்பை கால் பந்து தொடருக்கு முதன்முறையாக தகுதி பெற்றது.  இந்நிலையில், இந்த வரலாற்றுச் சாதனைக்காக உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ், தகுதி சுற்றுப் போட்டியில் விளை யாடிய மற்றும் பணியாற்றியவர் களுக்கு 40 பிஒய்டி (BYD) எலெக்ட்ரிக் கார்களை பரிசாக வழங்கியுள் ளார். உலகக்கோப்பை வென்ற நாடு களுக்கு கூட இவ்வளவு பிரம்மாண்ட பரிசுத்தொகை கிடைக்காத சூழலில், தகுதிச் சுற்றுக்கு முன்னேறியதற்காக உஸ்பெகிஸ்தான் அரசு சொகுசு எலெக்ட்ரிக் கார்களை பரிசாக வழங்கி யுள்ளது விளையாட்டு உலகில் ஆச்சர்யத்தையும்,நெகிழ்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இளையோர் (யு-20) பிரிவில் உஸ் பெகிஸ்தான் கோப்பை வென்ற போது ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் 33 கார்களை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோர்டானும் முதன்முறையாக... மொத்தம் 48 நாடுகளின் அணி கள் உலகக்கோப்பைக்கு தேர்வாக  இருக்கின்றன. இதுவரை அர்ஜெண்டி னா, பிரேசில், ஆஸ்திரேலியா என 13 நாடுகள் தேர்வாகியுள்ளன. உஸ்பெகிஸ்தான் போல மற்றொரு ஆசிய நாடான ஜோர்டானும் உலகக்கோப்பைக்கு தகுதிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை

பிஒய்டி (BYD) எலெக்ட்ரிக் சொகுசு கார்களின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.25 லட்சமாக உள்ளது. ரூ.50 லட்சம் வரை பல்வேறு மாடல்களில் கார்கள் உள்ளன. ஆனால் உஸ்பெகிஸ்தான் அரசு வீரர்களுக்கு எந்த வகை மாடல் வழங்குகிறது என்று தெரியவில்லை.

ஆர்சிபி அணியை வாங்க நான் முட்டாள் இல்லை கர்நாடகத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து ஆர்சிபி அணி யை விற்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. இதனை கர்நாடகத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வாங்குவதாக செய்திகள் வெளியாகின.  இந்நிலையில், இது தொடர்பாக அவர் பேசுகையில்,”நான் ஒன்றும் முட்டாள் இல்லை. எனது இளவயதில் இருந்தே நான் கார்நாடக கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போது இருந்தே எனக்கு அதில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டாலும் எனக்கு நேரம் இருந்ததில்லை. எனது கல்வி நிறுவனத்தைக் கூட பார்த்துக்கொள்ள நேரமில்லாமல் எனது குடும்பத்தின ருக்கு மாற்றிவிட்டு நான் ராஜினாமா செய்துவிட்டேன். எனக்கு ஏன் ஆர்சிபி தேவைப்படுகிறது? நான் ராயல் சேல ஞ்சஸ் மதுவைக் கூட குடித்ததில்லை” என அவர் கூறினார்.