சென்னை,பிப்.26- விவசாயிகளின் நலனை பாதுகாத்து, அவர்களின் வரு வாயை உயர்த்தும் வகையில் முதல் முறையாக கடந்த 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு என தனியாக நிதிநிலை அறிக் கையை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இது, விவசாயிகள் மட்டுமல் லாது, வேளாண் சார்ந்த பல்வேறு பிரிவு மக்களின் பாராட்டை பெற் றது. கடந்தாண்டைப் போன்று வரும் 2022-23 ஆம் ஆண்டுக் கான வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவை யில் விரைவில் தாக்கல் செய்யப் படுகிறது. இதையடுத்து, பிப். 23 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துகேட்புக் கூட்டம்அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்று மதியாளர்கள் உள்ளிட்ட வேளா ண்மையில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டறியும் வகை யில், மாநிலத்தில் கருத்து கேட்புக் கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன. காணொலி காட்சி வாயிலாகவும் கருத்து கேட்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
மாவட்டம்தோறும் ஆட்சி யர்கள் தலைமையில் விவசாயி களின் குறைதீர் நாட்களில் பெறப் பட்ட விவசாயிகளின் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் தங்கள் கருத்துகளை, அரசுக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் தொலை பேசி எண் அல்லது இதர சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்க லாம். கடிதத்தை, வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண் துறை, தலைமைச் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை 600 009 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரியிலும், 93848 76300 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமும் கீழும் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.