tamilnadu

img

தேர்வர்களை அலைக்கழிக்காமல் குளறுபடிகளைச் சரி செய்து நடத்துக!

சென்னை, அக். 25 - நீட் தேர்வைப் போல, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்களை அலைக்கழிக்கும் விதமாக ஆசிரி யர் தேர்வு வாரியம் குளறுபடிகளைச் செய்துள்ளது. இந்நிலையில் தேர்வை ஒத்தி வைத்து - தேர்வர்கள் விண்ண ப்பித்த மையத்திலேயே தேர்வு எழுதிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமிழக  உயர் கல்வித் துறை அமைச்சருக்கு அக்டோ பர் 25 திங்களன்று எழுதியுள்ள கடிதம் வருமாறு:

தமிழ்நாட்டில் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) விரிவுரையாளர்கள் பணிக்கான அறி விக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு வெளி யிடப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய த்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப் பட்டன. அந்தத் தேர்வுகளில் 156 மாண வர்களின் மதிப்பெண்கள் முறை கேடாக உயர்த்தி பதிவு செய்யப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டித் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைப்படி பல் வகைத் தொழில்நுட்பக் கல்லூரி விரி வுரையாளர்கள் 1060 பேரை தேர்ந்தெடு ப்பதற்கான போட்டித் தேர்வு 27.11.2019 அன்று அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்ப டியாக ஒத்திவைக்கப்பட்ட கணினி வழி தேர்வினை 2021 அக்டோபர் மாதம் 28  முதல் 30 வரை நடத்திட ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.  ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வு நடத்தப்பட்டு ஏகப் பட்ட குளறுபடிகள் நடந்து நீதிமன்றம் அத்தேர்வை ரத்து செய்து மறுபடியும் தேர்வு நடத்தப்படுவதைக் காரணம் காட்டி, ஒவ்வொரு தேர்வருக்கும், தேர்வு நடக்கும் இடத்தை மனம்  போன போக்கில் மாற்றி வெவ்வேறு  மாவட்டங்களுக்கு போட்டிருக்கிறார் கள். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் பல தேர்வர்களுக்கு பல நூறு  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருது நகர் போன்ற தென்மாவட்டங்களை தேர்வு மையமாக போட்டிருக்கிறார்கள். இன்னும் சிலருக்கு கன்னியாகுமரியில் தேர்வு மையம் போடப்பட்டுள்ளது. அதே போல் தென் மாவட்டங்களில் இருக்கும் தேர்வர்களுக்கு, வட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் கொடுத்திருக்கிறார்கள். 

இப்படி வெவ்வேறு இடங்களில் போடுவதால் தேர்வு எழுதும் தேர் வர்களுக்கு அலைச்சலும், பொருளா தார இழப்புகளும் தான் ஏற்படும்.  அறி முகம் இல்லாத மாவட்டத்தில் போடுவ தால் தேர்வுக்கு முந்தைய நாளே சென்று அருகில் எங்காவது தங்க வேண்டும்; கூடவே பெற்றோர்கள் செல்ல வேண்டும்; குறிப்பாக மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும் தேர் வர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத் தில், எந்த மையத்தில் தேர்வு எழுத வேண்டுமென்பது தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத் தான் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள் ளது. இதனால் தேர்வு எழுதும் தேர்வர் கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர். நீட் தேர்வுக்கு உடை கட்டுப்பாடு களுடன் மாணவர்களை ஒன்றிய அரசு அலைக்கழித்து கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இப்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் இதே தவறை செய்கிறது. இதனால் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனையில் தாங்கள் உடனடியாக தலையீடு செய்து, தேர்வர் கள் சிரமத்தை கணக்கில் கொண்டு பல் வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரை யாளர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்தி வைத்து விட்டு, குறைகளை சரி  செய்த பிறகு, இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கும் போது ஒவ்வொரு தேர்வரும் குறிப்பிட்டிருக்கும் தேர்வு மையத்தி லேயே தேர்வு எழுதும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;