tamilnadu

img

மதுரையில் கொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்

எதிரிக்கு கொலை மிரட்டல் விடுவதற்காக மதுரையில் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அனுப்பானடி பகுதியில் எதிரிக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்று ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரானது இறந்த அனுப்பானடியை சேர்ந்த பிரவீன்குமாருக்கு ஓட்டப்பட்டது. இவர் காமராசர் கல்லூரியில் படித்தபோது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த காரணத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி வெட்டி கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரவீனின் முதலாம் ஆண்டு நினைவுதினத்திற்கு எதிரிகளுக்கு கொலை மிரட்டல் விடும் விதத்தில் போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது. இதை கண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து, காரணமானவர்களை தேடி வருகின்றனர். 
 

;