2-ஆவது முறையாக கூட்டத்தில் கலந்து கொள்ளாத பிரதமர் மோடி
புதுதில்லி, மே 8 - புதுதில்லியில் நடை பெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது , ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லையே?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மல்லிகார்ஜூன கார்கே, “விமர்சிப்பதற்கான நேரம் இதுவல்ல, நாம் மிகவும் கடினமான காலத்தில் இருக் கிறோம். இதுதொடர்பாக பிரதமரிடம் பின்னர் கேள்வி கேட்போம்” என்று கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கடந்த ஏப். 24 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சித் தலைவர்கள் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டனர்
கூட்டத்திற்குப் பின், கிரண் ரிஜிஜு பேசுகையில், “கூட்டத்தின் தொடக்கத்தில் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியைக் காட்டினர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளன. எம்.பி.க்களிடமிருந்து சில ஆலோசனைகள் வந்தன” என தெரிவித்தார்.