tamilnadu

img

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

திருவாரூர் மாவட்டத்தில்  ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருவாரூர், மே 7 - திருவாரூர் மாவட்டத்தில் 2025 - 2026 ஆம்  ஆண்டில் பாலம் சேவை நிறுவனம், தேசியப் பசுமை படை, மை மதர் நிறுவனம் இணைந்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல்  மற்றும் வீடு வீடாக மரக்கன்றுகள் வழங்கும்  பணியை திருவாரூர் ஆட்சியர் த.மோகனச் சந்திரன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து பாலம் செந்தில்குமார் மற்றும் தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் நடனம் ஆகியோர் கூறுகை யில், “தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க வும், 33 சதவீத வனப்பரப்பை உறுதி செய்ய வும், 2019 ஆம் ஆண்டு முதல் மரம் நடும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 92,653 பனைவிதைகள், 33,766 மரங்கள் நடப்பட்டும், பொதுமக்களுக்கு வழங்கியும் வருகிறோம்.  இந்தாண்டு ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணியில் வனத்துறை, நகராட்சி,  பேரூராட்சி, ஊராட்சிகள், நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை மற்றும் அரசுத்துறை கள் பொதுமக்கள், தன்னார்வலர்கள் சேவை  அமைப்புகள், மகளிர் குழுக்கள், இணைந்து  இப்பணியை மேற்கொள்ள உள்ளோம். இப்பணி ஜூன் மாதம் தொடங்கி டிசம்பரில் நிறைவு பெறும்” என்றார்.