tamilnadu

img

கலைஞர் நூற்றாண்டு விழா! -- அனைத்து தரப்பினர் ஆதரவோடு நடத்த திட்டம்

சென்னை, மே 22- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப் பட உள்ளது.  கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3 தொடங்கி, 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 வரை நடைபெறுகிறது. இதை யொட்டி ஜூன் 3 ஆம் தேதி வட சென்னையில் தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கிண்டிகிங் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட் டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவ மனையை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சி முடி ந்ததும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற் றாண்டு விழாவை தொடங்கி வைக்கி றார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா ஏற்பாடுகளை நடத்த முடிவு செய்துள்ளார். இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை செயலாளர்க ளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின்  திங்களன்று (மே 22)  ஆலோசனையில் ஈடுபட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:- ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல மைச்சராக அமர்ந்தவர் தலைவர் கலைஞர். 13 முறை சட்டமன்றத் தேர்த லில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவர் தலைவர் கலைஞர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப் பினராகவும் அரிய வாதங்களை எடுத்து வைத்தவர்.  இந்திய நாட்டின் குடியரசுத் தலை வர்களை, துணைக் குடியரசுத்தலை வர்களை பல முறை தேர்ந்தெடுத்து அந்தப் பொறுப்புகளில் அமர்த்தி யவர். அதேபோல், பிரதமர்களை உரு வாக்கியவர். தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்ல - இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவ ராகவும் இருந்தார். 

தன்னுடைய ஆட்சிக்கு மூன்று இலக்கணம் இருப்பதாக அவர் சொன்னார். சமுதாய சீர்திருத்தத் தொண்டு, வளர்ச்சிப் பணிகள், சமதர்ம நோக்கு, இவை மூன்றும்தான் அவருடைய ஆட்சியின் இலக்கண மாக அமைந்திருந்தது. அன்னைத் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதி தொடங்கி, ஏராளமான பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகள் உரு வாக்கியது வரை, இப்படி நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கருணாநிதி.  அவரைப் பெருமைப்படுத்தும் விழா க்களாக மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு அவர் நிறைவேற்றிக் காட்டிய திட்டங் களை மக்களுக்கு நினைவூட்டுபவை யாக இந்த விழாக்கள் அமைய வேண்டும். மாதம் தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்தலாம். பெரிய பெரிய விழாக்களாக மட்டு மல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும்.  அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழி யர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அது அமைய வேண்டும். நூற்றாண்டு விழா தலைமைக் குழு,  விழாக் குழு, மலர்க்குழு, கண்காட்சிக் குழு போன்ற குழுக்கள் அமைச்சர் களை உள்ளடக்கி அமைக்கப்படும். இந்த கூட்டம் என்பது தொடக்கக் கூட்டம் தான். தொடர்ந்து நாம் பேசு வோம். இது குறித்த விரிவான அர சாணை விரைவில் வெளியிடப்படும்.அதற்கேற்ற வகையில் நாம் அனை வரும் ஒருங்கிணைந்து செயல்படு வோம். இவ்வாறு அவர் பேசினார்.